வெயிலில் சென்றால் கண் எரிகிறதா? சிலருக்கு வெயிலில் சென்றாலே கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சி என பாடாய்படுத்தும். கோடை காலத்தில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம் தலை சுத்தமாக... சுகாதாரமாக இல்லாமையே! தலையை சுத்தமாக வைத்துக் கொண்டால் கண்களை எப்போதும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம். அதேபோல், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். தலையில் பொடுகு மற்றும் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளவும். அப்படி தலை சுத்தமில்லாமல் இருக்கும்பட்சத்தில் கண் இமை, புருவம் ஆகியவற்றில் படிந்து, இமையின் அருகில் இருக்கும் சுரப்பிகளில் சீழ் பிடித்து, வெயிலில் அரிக்க ஆரம்பிக்கின்றன. ஆகையால் தலையை, முகத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும்.