Tamil Maruthuvam Tips.pdf

Discussion in 'Tamil Nadu' started by ramyasrini8, Nov 12, 2009.

Thread Status:
Not open for further replies.
  1. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    பத்து சிறந்த உணவுகள்

    சிறந்த நோய் நச்சு முறிவு மருந்துகளாகவும், கொலஸ்ட்ரல் அதிகரிக்காத உணவுகளாகவும் பத்து சிறந்த உணவுகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இந்த உணவுகளை நினைவில் வைத்து சேர்த்து வாருங்கள். நோய் நச்சு முறிவு மருந்துகளாக இந்த உணவுகள் இருப்பதால் நமக்குத் தெரியாமலேயே நமக்கு வந்த நோய்களும் ஆரம்ப நிலையிலேயே குணமாகிவிடும். இனி உணவுகளின் பட்டியல்.

    தேநீர்: தினமும் இரண்டு வேளை தேநீர் அருந்துங்கள். இதனால் டி-செல்கள் உற்பத்தி அதிகரிக்கும். இந்த டி செல்கள்தான் இன்டர்பெரான் என்ற பொருள் சுரக்கக் காரணமாக இருக்கிறது. இந்த இன்டர்பெரான்தான் உடலில் நுழையும் கிருமிகளை எதிர்த்து அழிக்கிறது. இத்துடன் இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

    பீன்ஸ்: மெதுவாக ஜீரணமாகும் அரிய உணவு, பீன்ஸ், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுநோயையும் தடுக்கிறது. புரதம், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் என சத்துக்கள் நிரம்பியது. நீரழிவு நோயாளிகளுடன் மற்றவர்களும் பீன்ஸ், மொச்சை, கொத்தவரங்காய், அவரை போன்றவற்றைத் தினமும் உணவில் சேர்த்து வரவும்.

    வெள்ளைப்பூண்டு: இரத்தத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது பூண்டின் அரிய சேவை. இதனால் பக்கவாதம் தடுக்கப்படுகிறது. கல்லீரலும் நோய் எதிர்ப்புச் சக்தியும், ஜீரணமண்டலமும் பூண்டு சாப்பிடுவதால் புதுப்பிக்கப்படுகிறது. தலைவலியும், அதிகச் சோம்பலும் தினமும் பூண்டு சாப்பிட்டு வருவதால் உறுதியாகக் குணமாகும்.

    ஆப்பிள்: ஆரோக்கியமான பல் ஈறுகளுக்குத் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிடவும். மெதுவாக ஜீரணமாகும் அரிய உணவுகளுள் ஆப்பிளும் ஒன்று. கொலஸ்ட்ரலைக் கு றைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து தாராளமாக உள்ள பழம், ஆப்பிள்.

    மீன்: நல்ல புரதம், ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம் போன்றவற்றிற்காக வாரத்தில் மூன்று நாட்கள் வஞ்சிரமீன், கானாங்கெழுத்திமீன் போன்றவை நல்லது. எந்த வகை மீனாக இருந்தாலும் குழம்பில் அவித்ததே சிறந்தது. அதிக பட்சம் 90 கிராம் அளவே தினமும் மீன் சேர்க்கலாம்.

    ஆலிவ் எண்ணெய்: இதயத்திற்கு நன்மை செய்யும் எண்ணெய் இது. குழம்பு, பச்சடி, அவியல் போன்றவற்றில் தலா ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    வாழைப்பழம்: பசியைத் தணிக்கும் அரிய பழம். காய்ச்சலின்போது வாழைப்பழம் நன்கு சாப்பிடவும். உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் வாழைப்பழம் சாப்பிடவும். அந்த அளவிற்கு கலோரி சக்தி நிறைந்தது. இதயநோய், புற்றுநோயைக் குணமாக்கும் பழம் இது. இரத்தக் கொதிப்பைத் தடுக்க பொட்டாசியமும், தோலும் முடியும் பளபளப்பாக மாற வைட்டமின் பி6-ம் வாழைப்பழத்தில் மிகவும் தாராளமாக உள்ளன.

    தயிர்: வயிற்றிலும், பிற உறுப்புகளிலும் தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது தயிரின் அரிய பணியாகும். மிகச்சிறந்த புரதமும், கால்சியமும் தயிரில் உள்ளன. தயிரில் உள்ள லாக்டோபாசில்லஸ் மற்றும் அசிட்டோபிளஸ் என்ற இருபொருள்களும் கொலஸ்ட்ரல் அளவை முற்றிலும் கட்டுப்படுத்துகின்றன. பெண்களும், தொப்பை வயிறு உள்ள வர்களும் தினமும் இரண்டு கோப்பை தயிர் சாப்பிடவும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தியும் உச்ச நிலையில் இருக்கும். தொந்தியும் உடல் பருமனும் குறையும்.

    ஆளிவிதைகள்: ஆண்களும், பெண்களும் சாப்பிட வேண்டிய விதைகள், ஆளிவிதைகள். தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் ஒமேகா-3 என்ற கொழுப்பு இதில் உள்ளது. இதயநோய், புற்றுநோய் உட்பட எல்லாவிதமான நோய்களையும் ஆளிவிதைகள் மிகுந்த ஆற்றலுடன் தடுக்கின்றன. மொச்சை போல ஊறவைத்து அவித்து தாளித்துச் சாப்பிடலாம்.

    வால்நட்: தாவர உணவுகளில் சிறந்த புரத உணவாகவும், ஒமேகா-3 நன்கு கிடைக்கும் முதல் தாவரவகை உணவாகவும் வால்நட் பருப்பு திகழ்கிறது. இதயப்பாதுகாப்பிற்கு மிகச் சிறந்த கொட்டை உணவு வால்நட்!

    மேற்கண்ட பத்து உணவுகளுள் தினமும் ஏழு உணவுகளாவது உங்கள் உணவில் இடம் பெற்றால் உங்கள் ஆயுசு நூறைத்தாண்டுவது உறுதி.
     
  2. Tujan

    Tujan New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Whatever the fruits/vegetables/ veg/non-veg may be our eating habit changes our health completely. Plz watch this video and try to buy the dvd
    YouTube - Anatomic therapy in Tamil by Healer Baskar , rare , must for all part(2/21).MP4

    all the 21 parts. Excellent and many people are getting the benefits immly.
    He explains everything right from Vaccination - cancer/AIDS. He gives us simple easy steps to follow. I'm seeing lot of benefits.

    Try to follow this. He is giving lectures in every part of Chennai now.

    Thanks,
    TUjan

    Natural forces within us are the best healers of diseases- Vethathiri Maharishi
     
  3. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு

    சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.

    இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

    செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

    கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

    பல்வலி போக்கும்

    உடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும், மகப்போறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி, மற்றும் சொத்தைப்பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.. கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

    உடல்வலி நீங்கும்

    ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. அஜீரணம், வாயுத்தொல்லை, வாந்தி, இருமல், அடிவயிற்று வலி, தொண்டைகம்மல், மூக்கு ஒழுகல், தலைவலி ஆகியவற்றில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.. கிராம்பு எண்ணெய் மேல் பூச்சாக அடி, இடுப்பு வலி, மூட்டுவலி, மற்றும் தொடை,நரம்பு வலி ஆகியவற்றிர்க்கு நல்ல பலன் தருகிறது. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

    தொண்டை எரிச்சல் நீங்கும்

    உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சேர்த்து சாப்பிட தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

    ஆஸ்துமா கட்டுப்படும்

    கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
    முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

    சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page