1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 25

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Feb 3, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    " இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான் சரண்.

    பொதுவாகவே உத்ராவிற்கு லேசில் கோபம் வராது, பேசுவர்களின் நிலையில் தன்னை வைத்து பார்த்து சமாதானம் செய்துகொள்வாள். ஆனால் , ஒரு விஷயத்திற்கு கோபம் வந்தது என்றால் பின் சமாதானம் செய்வது கடினம். இப்போதும் அப்படியே........


    அவன் சொல்லி முடிக்கவும் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ?....... வேகமாய் அவனை நெருங்கியவள், இரண்டு கைகளாளும் அவன் சட்டையை பிடித்து உலுக்கி

    "என்ன டா நினைச்சுகிட்டு இருக்க? பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிகலாம்னு சொல்லுவ..... சரிங்கனும்.... அப்பறம் சந்தேகப்பட்டு பேசுவ ..... சகிச்சுகனும்....... அப்பறம் சாரி கேட்ப...... லவ் பண்ணறேன் சொல்லுவ.. அதுக்கும் சரி தெரியாம செஞ்சுட்ட யோசிக்கறப்ப ........ கல்யாணத்த நிறுத்திடறேன்னு சொல்லிட்டு போய்டுவ....... அதையும் சரினு ஒத்துகனும்....... அப்பறம் வந்து தாலிகட்டி கூட்டிட்டு வருவ......... உனக்கு கழுத்தநீட்டிட்டு உங்கூட வரனும்.......... இப்போ கொஞ்சநாள் இருந்துட்டு உன் வழிய பார்த்துட்டு போனு சொன்னா........ சரி னு பெட்டிய தூக்கிட்டு போய்டனுமா?.........." கோபம் மிகுதியாக அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டவள்( இது நீங்க கேட்டதுக்காக பா....)

    "எப்பவாவது என்ன பேசவிட்டயா?......... நீயே பேசி ..... நீயே முடிவு எடுத்துட்டு அதுகான தண்டனைய மட்டும் எனக்கு தர............. என்னய சொல்லனும் ....... உன்ன போய் உருகி... உருகி ... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல ........ இதுவும் வேனும் இன்னமும் வேணும்......" சட்டையை விடுவித்தவள் கண்களில் நீர் வழிய தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.சிறிது நேரம் கண்ணீர்விட்டவள்

    " இப்ப சொன்ன பாரு என் கண்ணுல பட மாட்டேன்னு ..... அத செய் ..... இனி நான் உன்ன பார்க்க கூடாது...... பார்த்தேன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் போடா போ........" என்று கத்திவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்.


    சரணுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.... , அவள் சட்டையை பிடிக்கும் போது அதிர்ச்சியில் நின்றவன் அவள் பேச பேச அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனது காதுகள் தன் வேலையை செவ்வன செய்தாலும், மூளை அதை ஏற்க தாமதமானது. அவள் சென்று வெகு நேரத்திற்கு பிறகு தான் அவள் அடித்ததே உரைத்தது அவனுக்கு, அவள் பேசியதின் அர்த்தம் புரிய, துள்ளிகுதித்தான் அவளை தேடி கண்கள் அலைந்தது. அறை விட்டு வெளியே வந்து வீடெங்கும் அவளை தேடியும் அவளை காணவில்லை. ஒரு யூகத்தில் மாடிக்கு சென்றான், அங்கு அவள் இருட்டை வெறித்தபடி அழுது கொண்டிருந்தாள். அருகில் சென்றவன் தோளைப்பற்றி திருப்பினான். அவனது கைகளை தட்டிவிட்டாள், அவன் விடாது திருப்பி, அவளது முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டு

    " சாரி மா........... சாரி.........." என கோபத்தோடு முகத்தை திருப்பிகொண்டாள்.

    மறுபடியும் தன்பக்கம் அவளை திருப்பியவன் இறுக அணைத்துகொண்டான். முதலில் திமிறியவள் பின் அழுகையோடு அவனிடம் ஒன்றினாள். மனம் லேசாகும் வரை அழுதுமுடித்தவள் அவனிடமிருந்து விலக, சரண் இன்னும் இறுக்கிகொண்டான். சிறிது நேரம் கழித்து விடுவித்தாலும் தன் கையணைப்பிலேயே நிறுத்திகொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி கன்னத்தில் இதழ்பதித்தான், அவள் முகம் ரத்த சிவப்பிற்கு மாற , மீண்டும் மீண்டும் முத்தமிட்டு அவளது வெட்கத்தை ரசித்தான்.

    "போதும்........... போதும்...... எனக்கு வலிக்குது இல்ல...." என்று சினுங்கிய உத்ராவிடம்

    " இதுக்கே இப்படி சொன்னா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்குல்ல........" என்று கண்ணடிக்க அவள் அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்.

    " ஆ........... " உண்மையாக வலிப்பது போல பாவனை செய்ய, பதறியவள் தடவிட்டு கொண்டே

    "வலிக்குதா........" என

    "இங்க இல்ல இங்க......" என்று கன்னத்தை காண்பித்தான். முறைத்துகொண்டே

    "நீங்க பேசினதுக்கு அறையோட விட்டேனேனு சந்தோஷபடுங்க......." என

    " சாரி டா........ என்னவோ பேசி கஷ்டபடுத்திடேன் இல்ல........ "

    "................."

    " நீ கஷ்டபடுறயோனு நினைச்சு தான் அப்படி சொன்னேன்......"

    " கஷ்டபடுறவ தான் கல்யாணம் நின்னுபோகாமா இருக்க எல்லாத்தையும் செய்வாளா?....." அவளை ஆச்சரியத்தோடு பார்த்தவன்

    "ஏய் உண்மையாவா?...... என்ன பண்ண சொல்லு...."

    "ம்ஹ்ம் நீங்க முதல்ல ஏன் அப்படி நினைச்சிங்க அத சொல்லுங்க......"

    " நீ அன்னைக்கு என்கிட்ட உங்கள வாழ்க்கை முழுக்க சகிச்சுக்க முடியாதுனு சொன்னப்ப எவ்வளவு வலிச்சது தெரியுமா?...... இருந்தாலும் உன் விருப்பத்துக்காக தான் கல்யாணத்த நிறுத்தறேன்னு சொன்னேன்.... சொல்லிட்டு வந்துட்டனே தவிர என்ன பண்ணறது? எப்படி நிறுத்தறதுனு ஒன்னுமே தெரியல......... அப்ப பார்த்து ரிஷி வந்தானா......... அவன்கிட்ட எனக்கு இந்த கல்யாணாத்துல இஷ்டம் இல்லனு சொன்னேன், காரணம் கேட்டப்போ எதுவும் சொல்லலை, ஒன்னுமே பேசாம போய்ட்டான். அன்னைக்கு நைட் என்ன கூப்பிடு, நீ உத்ராவ கல்யாணம் பண்ணிகலனா, நானும் விஜிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இது தான் என் முடிவுனு சொல்லி போனை வைச்சுட்டான். எனக்கு என்ன செய்யறதுனே தெரியல, விஜி காக கல்யாணம் பண்ணிதான ஆகனும்னு நினைச்சேன். அதுமட்டுமில்ல எனக்கும் உன்ன விட்டு கொடுக்க மனசு வரல, அதுக்கு ஒரு காரணம் கிடைச்சதும் அப்படியே பிடிச்சுகிட்டேன்.ஆனாலும் உனக்கு பிடிக்காதத செய்றனேன்னு உறுத்திகிட்டே இருந்தது. அதுனால நீ ரொம்ப கஷ்ட படுறயோனு தோணிகிட்டே இருந்துதது. கார்ல வரப்ப அழுத இல்ல அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் நீ அழுதா எனக்கு எவ்வளவு வலிக்கும்னு, அப்போ முடிவு பண்ணேன் உனக்கு பிடிச்ச மாதிரி உன்ன வாழவைக்கனும்னு, இப்போ கூட நான் பீச்ல தான் இருந்தேன். உன்கிட்ட பேசறதுக்கு என்ன தயார்படுத்திகிட்டு இருந்தேன். ஆனா இப்போ புரியுது இதெல்லாம் தேவையில்லாததுனு......"


    "இப்பவாவது புரிஞ்சுதே...... அன்னைக்கு நான் உங்கள சகிச்சுக்க முடியாதுனா சொன்னேன் ...... நீங்க சொல்லுறத சகிச்சுக்க முடியாதுனு தான சொன்னேன்.. நீங்களா ஏதோ நினைச்சுகிட்டா நான் என்ன செய்யட்டும்........?, அன்னைக்கு நீங்க பேசிட்டு போனதும் நான் ரொம்பவே ஷாக் ஆகிட்டேன்....என்ன பிடிக்காம தான் கல்யாணாத்த நிறுத்தறீங்களோனு தோனுச்சு, ஆனா உங்க கண்ணுல தெரிஞ்ச வலி என்ன குழப்பிடுச்சு. விஜி தான் வந்து என்ன என்ன னு கேட்டு துளைச்சுட்டா அப்பறம் எல்லாம் சொன்னேன்.... அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா உண்மையாவே சரண் உன்ன லவ் பண்ணறான் டி ஏதோ கிறுக்குதனமா பண்ணிட்டான் னு, என்ன டி அண்ணன்னு சப்போர்ட் பண்ணறயானு கேட்டேன். இல்ல டி இத படிச்சா உனக்கே தெரியும்னு சொல்லி உங்க டைரிய கொடுத்துட்டு போய்ட்டா..., படிச்சப்ப தான் ஐயா, என்ன எவ்வளவு லவ் பண்ணிங்கனு தெரிஞ்சுது. அப்பறம் சாய்ந்தரம் ரிஷி போன் பண்ணான், சரண் கூட என்ன டி பிரச்சனைனு கேட்டான். ஏன் கேட்டதுக்கு நீங்க கல்யாணத்த நிறுத்த போறேன்னு சொன்னதா சொன்னான், நான் சும்மா சண்டைடா நான் சொல்லுற மாதிரி சொல்லுடா நான் சமாதான படுத்திகறேன்னு சொன்னேன், அவனும் அதே மாதிரி செஞ்சுட்டான். நானும் எல்லாம் சரியான மாதிரி அவன்கிட்ட காட்டிகிட்டேன். விஜிக்கு மட்டும் எல்லாம் தெரியும்.நாளைக்கு போன் பண்ணுவா பாருங்க......."


    " எனக்கு தான் எதுவுமே தெரியாம முட்டாளா இருந்திருக்கேன்......."

    "ம்ம்ம் புரிஞ்சுக்க மட்டுமில்ல , கண்ணு கூட தெரியாம இருந்திங்க.."

    " என்னது........"

    "பின்ன என்ன எத்தன தடவ உங்க காதலோட பார்த்திருப்பேன், ஒரு தடவயாவது என் கண்ண பார்தியா டா நீ"

    " என்ன மரியாதயெல்லாம் தூள்பறக்குது......"

    "ஆமா....... உனக்கு மரியாத வேற குடுக்கனுமா..... அதெல்லாம் முடியாது போடா...."

    "என்ன டா வா உன்ன........" என்று அவளை தூக்கிகொண்டு தங்களது அறைக்கு சென்றான்.


    நீ என் வானம்,நீ என் காற்று,நீ என் மூச்சு
    இப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன் - ஏனெனில்
    நான் என்பதே நீயல்லவா.


    (இனி நாம டிஸ்டர்ப் பண்ணா அடிக்க வந்திடுவாங்க..... வாங்க ஒடிடுவோம்....)

    - சுபம் -
     
    4 people like this.
    Loading...

  2. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ஃப்ரண்ட்ஸ்,

    நானும் கதை எழுதறேன்னு விளையாட்டுக்கு ஆரம்பிச்சேன்........
    அதுல முழுமையா ஈடுபட வைச்சது உங்க எல்லோரோட கருத்துகள் தான்.....
    அதுக்கு ரொம்பபபபபபபபபபபபபப நன்றி பா......
    இதோ முழுசா கதை (முடியாம) முடிச்சுட்டேன்...... நான் என்னென்ன மேம்படுத்திகனும்னு சொல்லுங்க பா .....pls.......

    உங்க கருத்துக்காக காத்துகிட்டு இருக்கேன்....

    அமைதியான வாசகர்களே...... இப்பவாவது cmt பண்ணுங்க பா.....
     
    3 people like this.
  3. Malunew2il

    Malunew2il Senior IL'ite

    Messages:
    106
    Likes Received:
    9
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hai thaen,
    Unga way of writing supera irnthuchu pa,kathai jet speedla bore adikama kondu poi,friendship,love rendaium supera handle panni oru happy ending thanthu irukeenga!devapriya kaathu ungalukum adichuducha?kavithai ellam solli kathaiya mudichu irukeenga:)vazhthukkal thaen..next story eppo pa?quicka start pannunga

    Regards,
    Malathi
     
  4. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Thaen,

    Soo Chweet...... thanks...enga saarbaa charan ah adichchadukku.......... ha aha ha .......... Unga kadhaiyin mudivil oru kutti kavidhai ...I liked it...Arumai......oru variyill azhagaa kaadhal ah puriya vechchu......kalakkureenga..........Unga ending kaaga wait pannittu irundaen..and commenting for your last post........But this should not be a last one...Start a new story shortly...neenga evalo adichchaalum naanga thaangippom....adhukku marakkaama comment post pannuvom....namma thangachi adichchaa mannichchuda maattoma...( After a fight)...adhu maadhiri........So dairiyama next one start pannunga...k.... lovely narration...I liked the way , you move the story...that too without any negative character or feelings in the character's mind......Improvement kku sonna...konjam iyarkkaiyai varnichchu...suuzhallai varnichchu konjam ezhudhalaam....Just an idea ma........My Best Wishes for Next One!!!!!

    Vasupradha.S
     
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Superah Sweetah mudichiteenga Thean. Innum two or three eppisodes poduveengannu parthen but immediateah mudichiteenga. Very nice story pa.

    Waiting eagerly for the next story. Seekiram next storyla kalakka aarambinga........
     
  6. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    +ive ending supera kondu poninga theanmozhi.
    unga future contributions kum al the best :)

    Cheers,
    Sweety
     
  7. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Thean,
    CONGRATS for finishing your story success fully.
    Enna ore oru chinna varuthamnaal
    Saranukku onne onnu mattum thaane kidaichathu, athu thaan.
    Romba , China pirachanai,
    athai romba yatharthamaa edugthukitte
    marakire, manikire, aduthavar nilaiyil
    irunthu yosikira heroine,
    Yosikkamal kobappadure Hero...
    Mansai veli padutha thavikire thangai,
    Thozhi, thangaiyin kathalai vizhiyale
    arinthu serthu vaicha heroine
    endru niraiya knots illamal
    neerodaiyin amaithiyaana nadaiyil
    kathai romba nalla irunthathu.

    Waiting for a new venture from you soon.
     
  8. vrani

    vrani New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Hi Theanu,

    Thanks for a wonderful, well written story. I really enjoyed reading your story. Eagerly looking forward for the next!

    Lakshmi
     
  9. renukasubbiah

    renukasubbiah Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    17
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Theanu
    Simple and good story. (Herova heroine adikanumnu vendikitathu yaruppa? Pavam Saran.) Yezhutha, yezhutha style & language will be much finer & better. All the best. Second storykku waiting. Take care
     
  10. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    uthra saran um serndhadhum super....
    first story laye kalakittenga...
    unga way of writing romba nalla irundhudhu...
    waiting for ur second story ma....
     

Share This Page