1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-36!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 19, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எத்தனையோ முறை கெஞ்சிக் கேட்டு பார்த்தும் அவனை அவள் இருக்கும் அறைக்குள் நுழைய மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அடிப்பட்ட மூன்றாவது நாள் தான் விமலனை டாக்டர் அழைத்து எல்லாம் சொன்னார்..
    தலையில் ஏற்பட்ட அடியில் அவளுக்கு நினைவு பிசகியது, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என எல்லாம் சொன்னவர், கடைசியாக தயங்கி தயங்கி அந்த இடியையும் அவன் தலையில் இறக்கினார்.

    " நீங்களாகவே உங்கள் குழந்தையை பற்றி கேட்ப்பீர்கள் என்று நினைத்தேன் விமலன்..." என்று இழுத்தார்.
    'குழந்தையா.. எந்த குழந்தையை பற்றி இவன் கேட்பான்...'
    இவன் விளித்ததைப் பார்த்து அவரே தொடர்ந்தார்... " சாரி விமல், உங்கள் குழந்தை கருவிலேயே அழிந்துவிட்டது..."

    அதற்கு பின்பு தான் தனக்கு ஒரு குழந்தை உருவாக இருந்த விஷயமே அவனுக்கு தெரியும். அவனுக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது. எனவே, ராமுவை துணைக்கு வைத்துவிட்டு அவன் வீட்டுக்கு கிளம்பினான். எதற்காக அவன் வீட்டுக்கு வந்தானோ அதற்கு அவசியமே இல்லாமல், அங்கே அவனுக்காக ஒருவன் காத்திருந்தான்.

    இவனா? இவன் எதற்காக இங்கு வந்தான்? ஒருவேளை நான் இன்று வருவது தெரியாமல் வானதியை பார்க்க வந்திருப்பானா? எதற்கும் அவனிடமிருந்தே வரட்டும்.

    வந்தது.... உண்மையல்லாத எல்லாமே அவனிடமிருந்து வந்தது. தானும் வானதியும் காதலித்தது, பிறகு பணத்துக்காக அவள் இவனை மணந்தது, அதற்காக கிஷோரை பயன்படுத்தி படங்களை மாற்றியது, பணம் பிடித்த அளவுக்கு விமலனை பிடிக்காமல் போனது என்ற உண்மையோடு கடைசியாக இந்த குழந்தை விமலனுக்கு சொந்தமானது இல்லை என்பது வரை எல்லாமே சொன்னான்.

    அவன் சும்மா சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.மற்றொரு பிரதி புகைப்படங்களை கட்டியே சொன்னான். உண்மை தானே.... அதிலிருந்தவன் தானே இவன்... அதிலும் இதுவரை அவளை நான் தொட்டதே இல்லையே? அப்படியிருக்க??

    அத்துடன் தன் யோசனையை நிறுத்திக் கொண்டவன் தான்... இதுவரை அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லாமல் அவள் தான் குற்றவாளி என்று தீர்மானித்துவிட்டான்.

    ............................................................................................................................................

    விமலன் நினைத்துக் கொண்டிருந்த இதை பற்றியே அங்கு சிவாவுக்கும் கிஷோர் சொல்லிக்கொண்டிருந்தான்.

    "இது தான் நடந்தது... அன்றைக்கு நானே எதிர்பார்க்கவில்லை...விமலன் நான் சொன்னதை உடனே நம்பிவிடுவான் என்று.. ஆனால் அது தான் நடந்தது.."

    வாங்கிய அடியில் அவன் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்பதை புரிந்துக்கொண்ட சிவா... "எதற்கும் நீ என்னுடன் சென்னைக்கு புறப்படு, உன்னை வைத்து தான் இனி அவர்களை நான் ஒன்று சேர்க்க வேண்டும். நீ ஒருவன் தான் எனக்கு இருக்கும் துருப்பு சீட்டு."

    கிஷோரும் கிளம்பினான். அவர்கள் இருவரும் ஒன்றாகவே அன்றிரவு சென்னைக்கு பயணப்பட்டனர். அடுத்த நாள் கிஷோரையும் தன் கூடவே தங்க வைத்துக்கொண்டான். அதிர்ச்சியை பார்த்த வானதியிடம் சொன்னான்.

    "வானதி, என் இத்தனை நாள் பிரச்சனைக்கும் எனக்கு கிதைத்திருக்கும் ஒரே தீர்வு கிஷோர் தான். அவனை நினைத்து உனக்கு எந்த பயமும் வேண்டாம்."

    ஆனால் வானதிக்கு அந்த அதிர்ச்சியை விட ஆச்சர்யம் ஒன்று இருந்தது... அது, அவள் எதிர்ப்பார்த்தது போல கிஷோரை அவன் விமலனிடம் அழைத்து செல்லவில்லை... அதை விட,சிவா கிஷோரை ஒரு விருந்தாளி போல கவனித்துக்கொண்டான்.
     
    Last edited: Nov 19, 2010
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    yethukku than ippadi suspence vaikkarayo.....:rant

    kishore kitta irunthu therinja unmaya...avana vache solla vaikka vendiyathu thaana vimal kitta....
    atha vittutu ithu enna raaja ubacharam avanukku...????

    siva oda master plan enna ma?????waiting for know that....:)
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nalla irunthathu intha part...
    siva athiradi ya munnadiye vanthirukalam...
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Missing r kutti kavithai Priya..
     
  5. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ayyo, yen virunthaali pola kavanikran... appadina... vanathy and kishore pair a....
    evolo suspense...:rant
     
  6. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    creating possessiveness for hero ????
     
  7. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வானதிய கிஷோர் கூடவா?????? நோ ஸ்ரீ வேண்டாம்.
    வானதி விமல் கூடத் தான் தேவா சேர்த்து வைப்பாங்கன்னு நினைக்குறேன்.

    அப்ப வண்ணமுகில்???
    அடுத்தவங்க காதலன தட்டிபரிச்சது வானதி செஞ்ச தப்புன்னா
    அடுத்தவங்க கணவன தட்டிபரிச்சது வண்ணமுகில் செஞ்ச மிகப் பெரிய தப்பு.

    அன்புடன்,
    தமிழ்.
     
  8. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ena priya kuzhapura???
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Raba... intha story full ah padikum pothu thaan ungaluku puriyum... ippa confuse aagura mathiri thaan irukum...thank you raba...:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you latha ka...:)
     

Share This Page