சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் நிழல் தரும் மரமாய் இருக்கிறாய் இருந்தும் உள்ளிருக்கும் வெப்பமது தணிந்த பாடில்லை தளராது, ஆசுவாசபடுத்த மிதமான தென்றலாய் வீசுகிறாய் துளியும் விதியின் மீது ஏற்பட்ட சினமும் குறைந்து விடவில்லை இருண்ட மனதை போலவே கருத்த மேகங்களோடு முதல் துளியாய் மேல் விழுகிறாய் மெல்லிய மண் வாசம் நாசியில் ஏற சிறிதே அண்ணாந்து பார்க்க இது தான் தருணம் என்று சட்டென்று பொழிகிறாய் மழையாய் இன்னமும் விடையறியா கேள்விகளோடு மனமும் உடலும் சோர்ந்திருந்த வேளையில் இயற்கை அன்னை உன் அணைப்பில் மெய் மறந்து விழி நீரும் கரைய அதுவரை இருந்த இறுக்கமும் குறைய புதிதாய் பிறந்த தைரியத்துடன் மீண்டும் தொடர்கிறது பயணம்
Room pottu yosepeengalo ??? Chennai..yila athukku kooda vazhi erukathu ninanaikkuraen.. 'Shower'am panradukke thanni kidaikkadhu.. .Hmmmm