அங்காடி விலைவாசி ஏறிவிட்டதென யார் சொன்னது? மனிதனின் மனசாட்சி மிகக் குறைந்த விலையில் விற்கப் படுகிறது இங்கு காசுக்காக கற்பு கை மாறுகிறது அது சரி கற்பு இங்கிருந்தால் என்ன அங்கிருந்தால் என்ன கால் வயிற்றுக்காவது கஞ்சி கிடைத்தால் நன்று நாணயம் குறைந்து விட்டது என்று நெஞ்சு பதறுகிறவர்களே அரசாங்கமே அதன் அளவைக் குறைத்துவிட்டபின் மக்களிடம் அதைப் பெரிய அளவில் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்? சரி மாறிவரும் உலகில் மாறாதிருப்பது இது தான் என்று திரும்பிப் பார்த்தால் தாய்மையும் தூக்குப் போட்டுக்கொண்டு விட்டது குழந்தையைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டு விட்டது மனிதனின் மனசாட்சி மிகக் குறைந்த விலையில் விற்கப் படுகிறது இங்கு வீயார்
@crvenkatesh, In this fast world everything is money oriented and all are weighed by money.So,rest all like our trust,inner soul etc are going silent. Good one.