பிரார்த்தனை - குறள் வெண்செந்துறை இறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம் நிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு விளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம் உளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால் கடவுளின்முன் சிரம்தாழ்த்தி குழைவதினும் நன்றாம் உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்ந்தால் ஈசனின்முன் மண்டியிட்டு இறைஞ்சலினும் நன்றாம் நேசமுடன் தாழ்ந்தவரை நாமுயர்த்தி விட்டால் பாவங்களை மன்னிக்கும் பிரார்த்தனையை விடவே நாமெதிரிகள் இடம்காட்டும் நட்புமிக நன்றாம் வீயார்