கைகையாய் இலையெல்லாம் பசுமையாக விரிந்திருக்க, பூப்பூவாய் செம்முகமும் ஆங்காங்கே தெரிந்திருக்க, விரல் விரலாய் கிளையெல்லாம் மெல்லிதாய் அடியிருந்தே படிப்படியாய் இருந்தன வண்ணப் போர்வையதைப் பிடித்திருந்தே! நிழல்நிழலாய் அம்மரத்தின் கீழெங்கும் படர்ந்திருக்க, குழல்குழலாய் சிறு குயில்கள் காலைகளில் இசைத்திருக்க துகள்துகளாய் மனப்பாரம் சிதறி எங்கும் போய் விடவே பகல்பகலாய் ஒரு தெளிவும் என்னுள்ளே பிறந்ததுவே! விழிவிழியாய் இது வரையில் பரிகசிப்பை மட்டுமே அடைஅடையாய் எவ்விடத்தும் கண்டேன்! இனி நானுமே படல்படலாய் அவை வியப்பில் விரிந்திடும் வண்ணமே படிப்படியாய் மாற்றமுந்தான் கொண்டிடுவேன், திண்ணமே! துளித்துளியாய் நீர் சேர்ந்து விழிவாசல் இறங்கியதே! இழைஇழையாய் நம்பிக்கை எனை மீண்டும் ஒருக்கியதே! அடுக்கடுக்காய் துன்பம் இனி வந்தாலும் அஞ்சேனே! பொடிப்பொடியாய் அவை யாவும் உதிரும்படி செய்வேனே!
In fact I have written on the basis of both, long before, @jskls. Thanks for your feedback. Just because you asked, I'll write one sooner! -rgs