திருவல்லிக்கேணி தேவதை (வஞ்சி விருத்தம்) நிலாத்துண்டு குடியிருந்த தெருவில் நாங்களும் குடித்தனம் புகுந்தோம் உலாவரும் அவளழகைக் காண விழாக்கோலம் பூணும் தெருவே பாலைப் போலவள் வண்ணம் பருவத்தின் விளம்பரச் சின்னம் மேலே சொல்லத்தான் எண்ணம் வீங்கிப் போகுமென் கன்னம் வாலிபர் சங்கத்தின் 'தலைவி' வண்டென அவள்பின் அலைவோம் வாசலைப் பெருக்க வருவாள் மனதைக் குப்பையாக்கிப் போவாள் கனவுகளில் அவளோடு பாடினேன் கார்டனில் எல்லாம் ஆடினேன் கலர்கள் எத்தனை எனநான் கற்றேனவள் ஆடைகள் கண்டு அண்ணா என்று சொன்னாள் ஒருநாள் என்னருகில் வந்து கண்ணாடி மனமும் உடைந்தது கண்ட திரைப்படமும் முடிந்தது இனிமேல் காதல் வேண்டாம் என்றிருந்தேன் ஒருசில நாட்கள் பின்கண்டேன் இன்னொரு நிலவை பௌர்ணமி ஆச்சு வாழ்க்கை வீயார்