வான்குளத்து மீனெல்லாம் கண்ணே உன் இருவிழியோ சிறுத்திடவும் செய்தனவோ அறியேன்! இனி நாளெல்லாம் சுட்டெரிக்கும் சூரியனும் தான் குளிர்ந்து போனாலும் உள்ளிருக்கும் வெப்பமதும் குன்றிடாது ஒருநாளும்! சிறுநிலவும் பெருவானை பொருள் விளங்கச் செய்கிறது! உன் நினைவும் என் மனதை வெளிச்சமிட்டு நிறைக்கிறது. விரைகின்ற காலமது, விறைத்திங்கு நிற்கிறது! வண்டதுவோ பூவின் மது வாசத்தில் திளைக்கிறது! வசந்தமிது என மனமும் வானெட்ட உரைக்கிறது! விசனமது மறுபுறமும் வீதியைப் போல் நீள்கிறது! இருநிலையும் மனதுக்கு இதமாகவே இருக்கிறது! ஒருவரென நாம் மாறும் கனவிலது கிடக்கிறது!
@rgsrinivasan, Good one.Hope they unite early. சுட்டெரிக்கும் சூரியனும் தான் குளிர்ந்து போனாலும் உள்ளிருக்கும் வெப்பமதும் குன்றிடாது ஒருநாளும்! Beautiful words and lines