யார் நீ? யார் நீ என்றான் கண்ணன் யானே என்றாள் ராதை போய்விடு இன்னும் நீ பண்பட வில்லை என்றான் யார் நீ என்றான் கண்ணன் உன்னவள் என்றாள் ராதை போய்விடு இன்னும் நீ பண்பட வில்லை என்றான் யார் நீ என்றான் கண்ணன் யானும் நீ என்றாள் ராதை போய்விடு இன்னும் நீ பண்பட வில்லை என்றான் யார் நீ என்றான் கண்ணன் அமைதியாய் நின்றாள் ராதை வாவென்றான் கண்ணன் மறைந்தாள் அவனுள் ராதை வீயார்