இம்மையில் இன்னல் கூட்டும் ஆணவம் கன்மம் மாயை மும்மலம் நீக்கக் கிட்டும் ஆண்டவன் வீடுபேறு ! அறம் பொருளின்பம் யாவும் துய்த்துள அமைதி காணும் திறம் கொண்டத் தூயவர்க்கே வாய்த்திடும் வீடுபேறு ! பொறுமையுள் பூமி போல பணிவுடன் கடமை தீர்த்துச் சிறுமைகள் நீக்கி உயரக் கனிந்திடும் வீடுபேறு! பெற்றிடும் கல்வி ஞானம் மற்றுள உலக இன்பப் பற்றெலாம் அற்ற நிலையில் உற்றிடும் வீடுபேறு ! நயமுடன் கருணை காட்டி நலிந்தவர்க்கு அருளிச் செய்யும் பயனுள்ள வாழ்க்கை வாழ பொலிந்திடும் வீடுபேறு ! வையத்து உயிர்கள் எல்லாம் பரமனின் வடிவே என்று ஐயமற உணர வாய்க்கும் வரமன்றோ வீடுபேறு ! Regards Pavithra
nice poem, what is the meaning of the title? The way its written and the style is nice. @ pavitra i would appreciate a little translation of the title and the theme.
Poetlatha, the title and the theme of this poem is about Moksha, liberation of the soul Regards, Pavithra
thank-you dear, i thought it was related to the abode of God, this word was very new to me, i appreciate your prompt clarification! EXCELLENT Poem!
- முக்தி – வீடு பேறு தான் முடிவான லட்சியம் - தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ. அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி! அதுவே மோட்சம்! அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை! - அந்த ஒரு லட்சியத்தை மையமாக வைத்தே பரம்பொருளான ஆதிபராசக்தி இந்த உலக நாடகத்தைத் தொடர்ந்து நடத்திய படி இருக்கிறாள். - இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள் - ---------
@PavithraS, அழகியச் சந்தம் கொண்டு அருந்தமிழ் கவிதை செய்தாய் பழுதில்லாக் கருத்தை வைத்து பாடலை நீயும் நெய்தாய் இதுபோன்ற கவிகள் செய்ய உன்போன்ற கவிகள் இருக்க விதிகளை வென்று தமிழும் வாழ்வாங்கு வாழும் இங்கே