ஒற்றை நரம்பை சுண்டி விட்டார், முற்றாய் உடலெங்கும் அதிர்ந்திடத் தான்! வெள்ளமென இசையும் பெருகியதே! வள்ளலென மனமும் போற்றியதே! மயிலிறகும் இம்மென்மை தான் பெறுமோ? மனிதர் குரல் என்றேனும் நெருங்கிடுமோ? பரிதவிக்கும் அவர்தம் மனம் பொங்கி, விரிந்திருக்கும் வானென தனைக் காட்டும்! ஆடிப் பதினெட்டின் புதுப்பெருக்காய் ஓடிக் குதித்தும், வருமவரிசை தான் தேடிச் சோர்ந்தாலும் கிடைக்காதே! சாடித் தூற்றிடுவார் நாள் வீணே! எப்பிறவியில் எதனால் அர்ச்சித்தே இப்பேற்றை அவரும் பெற்றாரோ? இப்பிறவியில் இவ்வின்பம் போதும்! இப்புடவியில் இதினும் பெரிதுண்டோ? வீணை பொழியும் அச்செவ்விசைதான் வானை நிறைக்கும் வெண்மழை போலே. தேனைப் பருகும் பொன்வண்டெனவே ஏனை மாந்தரும் அங்கிருந்தாரே!
கலைமகளின் கைப்பொருளைக் கவிதையின் பாடுபொருளாய் வைத்தக் கவிஞரே , வீணையின் நாதமாய் விரிந்தது இக்கவிதை ! மிகவும் நன்றி ! Regards, Pavithra
உங்கள் பாராட்டுக்கு நன்றி @PavithraS. நீங்கள் எழுதும் விதமும், பின்னூட்டம் தரும் முறையும் வேணி மோகன் என்பவரை நினைவுபடுத்துகிறது. அவர் இங்கே மிக நிறைய நல்ல கவிதைகள் எழுதி இருக்கிறார். -ஸ்ரீ
@rgsrinivasan again another good one, @PavithraS your comments add so much beauty to the poem too! I'm so glad to know you all through IL what great talented and gifted people....
@rgsrinivasan, அருமை அருமை .வீணை கற்க வேண்டும் என நினைப்பது உண்டு ,ஆனால் இன்று வரை கனவகவவெ உள்ளது.விரைவில் கற்க துண்டியுள்ளது உங்கள் கவிதை :2thumbsup: