[h=3]ஞானத்தின் ஒளியினிலே[/h] எனது எனதில்லாதது எல்லாமே இருதினங்களுக்கு கனமில்லை நீர்மேல்பூத்த தாமரை மனங்களுக்கு பழந்தின்ன குரங்குண்டு பணந்தின்ன உறவுண்டு நிழல்கூட இரவினிலே நம்முடன் வருவதில்லை உன்னிதழில் சிரிப்பிருந்தால் எல்லாரும் உறவுகள் தான் . கண்ணீருக்குப் புகலிடம் கண்கள்கூட தருவதில்லை. உலையேற்றிய பாத்திரத்தில் ஊற்றிவைத்த குளிர்ந்த நீர் கரைந்து தான் போனதோ காற்று தான் ஆனதோ அலைபாயும் நெஞ்சத்தை இறையிலேற்றி வைத்ததும் அடங்கித்தான் போனதோ அமிழ்ந்து தான் போனதோ எட்டெழுத்து மந்திரமே இறுதியென்று ணர்ந்தபின் எட்டெழுத்து மந்திரமே உறுதியென்று ணர்ந்தபின் எட்டெழுத்து மந்திரத்தைப் பற்றிநீயும் நின்றிட எட்டெழுத்து மந்திரமும் சுற்றியுனை நிற்குமே எட்டியிருந்து பார்க்கையில் ஒருதொலைவு தெரியுது எட்டின்துணை கொண்டுவிட கிட்டமாகத் தெரியுது எட்டியிருந்து பார்க்கையில் ஒருதொலைவு தெரியுது எட்டியுள்ளே பார்க்கையில் கிட்டமாகத் தெரியுது குற்றமுள்ள பிறவியைக் கொண்டாடும் மாந்தரே எட்டெழுத்து மகிமையை எங்கனம்நீர் மறந்ததோ? குற்றமுள்ள பிறவியைக் கடந்துகாண வாருமேன் எட்டெழுத்து மகிமைநீர் உணர்ந்தோத வாருமேன் எட்டெழுத்துக் குள்ளனைத்து ஆதியந்தம் அடங்கிடும் முட்டவரும் மாடுகளும் மூச்சடைத்து ஒடுங்கிடும் கெட்டியிருள் விலகியங்கு கதிரொளியும் துலங்கிடும் சிற்றறிவும் விரிந்தெல்லாம் சட்டென்று விளங்கிடும் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்