ஒருபோதும் இவ்வார்த்தைகளை நீ என்னிடத்தில் சொல்லிடலாகாது! இப்போதே என்னை வடவைத்தீ எரிக்கிறது இடைவெளி இல்லாது! நீ இல்லை என்றால் இரவுகளும் விடியும் தான் என்றாய். அது சரியே! ஆயினும் அவை பிறருக்குத் தானே! எனக்கென்றும் விடியல் இருக்காதே! எனைச் சிரித்திட வைத்த நீயே தான் அழ வைத்தும் காண நினைத்தாயோ? நானழுவேன் எனினும் அதில் நீ தான் துயர் கொள்வாய். அதை நீ அறியாயோ? உன் நிழலாய் மாறிட மாட்டேனா? என நான் ஏங்கிக் கொண்டிருக்க, எனை முழுதாய் நீங்கிட நினைத்தாயோ? சொல் நீயே அன்பே! இது சரியா? இறப்பு, பிறப்பு என்பதெல்லாம் ஒரு கணக்கு. வேறெதுவும் இல்லை. நீயே எனக்கென்றும் எல்லாம்! உனை விட பிறிதொன்றும் எனக்கில்லை. சந்திரனைப் பற்றிடும் அரவதுவும் சற்றைக்கெல்லாம்.நீங்கி விடும் மீண்டும் பொன்னொளி விரைந்தே பரவும் அவ்வாறே நம் வாழ்வும் இனி அமையும்!