1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிடிவாதம்

Discussion in 'Regional Poetry' started by Poetlatha, May 5, 2015.

  1. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அரண்டு புரண்டு அழுது சாதிப்பது குழந்தையின் பிடிவாதம்
    படிப்பதைவிட வேறெதாவது செய்வது பிள்ளையின் பிடிவாதம்
    பரிட்சைக்கு படி படி என்று பாட்டு பாடுவது தந்தையின் பிடிவாதம்
    சாப்பிடு சாப்பிடு என்று சமைத்து தொந்தரவு செய்வது தாயின் பிடிவாதம்
    கணனியில் பொழுதைக் கழிப்பேன் கடைக்கு வரமாட்டேன் என்று கணவனின் பிடிவாதம்
    கோடி கொடுத்தாலும் கொல்லையில் புல் வெட்ட மாட்டேன் என்று மனைவியின் பிடிவாதம்
    படத்துக்கு போகலாம் என்றால் சாக்கு சொல்வது நண்பனின் பிடிவாதம்
    தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று தோழியின் பிடிவாதம்
    காதலுக்கு பச்சைகொடி காட்டும்வரை கவிதைமழை பொழிவது காதலனின் பிடிவாதம்
    கல்யாணம் செய்தால் காதலனுடந்தான் என்று காதலியின் பிடிவாதம்
    பட்டு சட்டை போடவில்லையா என் பேராண்டி என்று தாத்தாவின் பிடிவாதம்
    பொன்சங்கிலி பூட்டவில்லையா என் பேத்தி என்று பாட்டியின் பிடிவாதம்

    மருமகள் சொல்வதை கேட்கவேண்டுமா என்று மாமியாரின் பிடிவாதம்
    மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாறவேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம்

    பிடிவாதம், பிடிவாதம், பிடிவாதம் உலகில் இன்னும் பல பிடிவாதம்
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உலகத்தில் உள்ள அத்தனை பிடிவாதங்களும் உங்கள் கவிதை மூலம் தெரிய வந்துள்ளது .கவிதை அருமை . வருக வருக
     
  3. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot Periamma, for reading all my poems and encouraging me. Will share more. I take the privilege from your name and wish you HAPPY MOTHERS DAY in advance.
     
  4. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாறவேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம்...
    -
    கற்பனை அருமை...
    -
    அப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்த மாமனார்
    கொடுத்து வைத்தவர்தான்...!!
     

Share This Page