அரண்டு புரண்டு அழுது சாதிப்பது குழந்தையின் பிடிவாதம் படிப்பதைவிட வேறெதாவது செய்வது பிள்ளையின் பிடிவாதம் பரிட்சைக்கு படி படி என்று பாட்டு பாடுவது தந்தையின் பிடிவாதம் சாப்பிடு சாப்பிடு என்று சமைத்து தொந்தரவு செய்வது தாயின் பிடிவாதம் கணனியில் பொழுதைக் கழிப்பேன் கடைக்கு வரமாட்டேன் என்று கணவனின் பிடிவாதம் கோடி கொடுத்தாலும் கொல்லையில் புல் வெட்ட மாட்டேன் என்று மனைவியின் பிடிவாதம் படத்துக்கு போகலாம் என்றால் சாக்கு சொல்வது நண்பனின் பிடிவாதம் தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று தோழியின் பிடிவாதம் காதலுக்கு பச்சைகொடி காட்டும்வரை கவிதைமழை பொழிவது காதலனின் பிடிவாதம் கல்யாணம் செய்தால் காதலனுடந்தான் என்று காதலியின் பிடிவாதம் பட்டு சட்டை போடவில்லையா என் பேராண்டி என்று தாத்தாவின் பிடிவாதம் பொன்சங்கிலி பூட்டவில்லையா என் பேத்தி என்று பாட்டியின் பிடிவாதம் மருமகள் சொல்வதை கேட்கவேண்டுமா என்று மாமியாரின் பிடிவாதம் மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாறவேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம் பிடிவாதம், பிடிவாதம், பிடிவாதம் உலகில் இன்னும் பல பிடிவாதம்
Thanks a lot Periamma, for reading all my poems and encouraging me. Will share more. I take the privilege from your name and wish you HAPPY MOTHERS DAY in advance.
மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாறவேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம்... - கற்பனை அருமை... - அப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்த மாமனார் கொடுத்து வைத்தவர்தான்...!!