[h=3]கடுமையான குளிர் காலத்தில் வெயிலைக் காண ஆசை[/h]ஜோவென்று கொட்டும் மழையில் சுட சுட வடை தின்ன ஆசை சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் மரத்தை தேடி ஓட ஆசை குவிந்து இருக்கும் பனியில் குழந்தைபோல் உருண்டோட ஆசை வண்ண வண்ண இலைகளைக் கண்டு காவியம் பாட ஆசை இலையில்லா மரத்தைப்போல் துறவியாய் நிற்க ஆசை பூத்துக் குலுங்கும் மலர்களைப்போல் மகிழ்ச்சியாய் இருக்க ஆசை இயற்கையுடன் என்றும் இணைந்து இருக்க ஆசை!!!