ஒரு பெண் போலே நீ இருக்கின்றாய்! துள்ளலும், சுழிப்பும் நிறைந்தவளாய்! எப்போதும் எதையேனும் நீ தந்து கொண்டே இருப்பதில் இன்பம் கண்டு. போற்றுவார் வெகு சிலர் என்றாலும், நீ அதனால் கவலை கொள்வதில்லை. உனை பலர் பயன்படுத்திக் கொண்டாலும் நீ எவரையும் குறையும் சொல்வதில்லை. வயதாகையில் இரத்தம் சுண்டி விடும். துள்ளலும், பாய்ச்சலும் குறைந்து விடும். உனக்கோ இவையெல்லாம் பொருந்தாது! இவை நிகழ்ந்தால் எமக்கே பெருந்தீது! எங்கள் தலைமுறைகள் பார்த்தவளே, எம் அன்னையே! நீ எங்கள் குறையும் பொறுத்தருள்வாய்! கனிவாய் எம் மீதே! வாழ்த்தும் எமக்கடுத்த தலைமுறையும்! எப்போதும் பெற்றுக் கொள்பவரும் பெறுவதின் அருமை என்றும் அறியார். கொடுப்பவரின் கருணை தெரிபவரும், தம் நன்றியை ஒருநாளும் மறவார்! நதியே! நீ என்றும், எப்போதும் வற்றாமல் இருப்பாய்! வேண்டுகிறேன்! சிறுமதியாளர் செய்யும் பிழையும் நுரையாய் தள்ளிடவும் கோருகிறேன்!
@rgsrinivasan, நதியில் தண்ணீர் ஏது? துள்ளலும், பாய்ச்சலும் குறைந்து விடும்.(விட்டது) நாம் இப்பொழுதாவது இயற்கை சுரண்டாமல் இருக்கவேண்டும் அருமையான கவிதை
You are right Harini. Hoping that we stop ruining our rivers and natural sources. Thanks for your feedback. -rgs