1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Discussion in 'Regional Poetry' started by saidevo, Dec 29, 2014.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
    ரமணி


    இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.


    ============================================================
    01. Pantoum: பாண்டி
    Pantoum - Wikipedia, the free encyclopedia
    ============================================================
    இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்
    தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:
    https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w


    இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:


    Stanza 1 A B C D
    Stanza 2 B E D F
    Stanza 3 E G F H
    Stanza 4 G I (or A or C) H J (or A or C)


    This pattern continues for any number of stanzas, except for the final stanza,
    which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
    are the second and fourth of the penultimate; the first line of the poem
    is the last line of the final stanza, and the third line of the first stanza
    is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
    are repeated although the words remain exactly the same: this can be done
    by shifting punctuation, punning, or simply recontextualizing.


    Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia


    அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
    அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
    இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
    அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
    அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
    முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.


    pantoum உதாரணங்கள்:
    Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup


    *****


    இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:


    வேலை எனவோ?
    (ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
    சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


    காலை நேரம் கதிர்வரும் போதில்
    மேலைக் காற்றில் மேனியும் குளிர
    சாலை வாகனம் சற்றே குறைய
    காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1


    மேலைக் காற்றில் மேனியும் குளிர
    சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
    காலை வீசிக் கடற்கரை சென்றாள்
    வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2


    சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
    சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
    வாலைக் குமரி வயதில் இளையாள்
    சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3


    சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
    மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
    சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
    வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4


    மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
    சாலை வாகனம் சற்றே குறைய
    வேலை எனவோ வியந்தேன் நானே
    காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5


    --ரமணி, 26-27/12/2014


    *****


    வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!
    (நாற்சீர்ப் ’பாண்டி’)


    ’பாரத பூமி பழம்பெரும் பூமி
    நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*
    வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
    காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!


    ’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’
    பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
    காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்
    நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!


    பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
    யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
    நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்
    சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!


    யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
    தேரும் வாழ்வில் தேடியே ஞானச்
    சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்
    சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!


    தேரும் வாழ்வில் தேடியே ஞான
    வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
    சீரும் சிறப்பும் செயல்வித மாகும்
    ’பாரத பூமி பழம்பெரும் பூமி’!


    --ரமணி, 27/12/2014


    குறிப்பு:
    முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’
    என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.


    *****


    பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
    (மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)


    பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
    வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
    கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
    அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1


    வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
    உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
    அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்
    பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2


    உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
    துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
    பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்
    கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3


    துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
    புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
    கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே
    பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4


    புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
    கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
    பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்
    பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5


    --ரமணி, 27/12/2014, கலி.12/09/5115


    *****
    ============================================================
    02. Nonet: ஒன்பான் ஓரசை
    Nonnet - Wikipedia, the free encyclopedia
    ============================================================
    A Nonnet is a type of poem which has the following requirements:
    * It has nine lines
    * The first line has 9 syllables, the second 8 syllables, the third 7 syllables until the ninth line which has one syllable.
    * Has an iambic meter (stress every other syllable)


    Example: A Bereft Mother
    Poem: A Bereft Mother by Alfred Vassallo


    children grew and left the nest empty
    the rooms are vacant and silent
    the table made for one
    she feels deserted
    no room to smile
    worrying
    about
    them


    தமிழ் வடிவம்: ஒன்பான் ஓரசை
    01. Nonet என்பதைத் தமிழில் ’ஒன்பான் ஓரசை’ எனலாம்.


    சீர்க் கணக்கு இல்லாமல் முதலடியில் ஒன்பதில் தொடங்கி ஒவ்வோர் அடியிலும் ஓரசை
    குறைவாக வரவேண்டும். இரண்டு அடிகளிடை ஓரெதுகை யாகவும், இறுதி
    மூன்று அடிகளிலும் ஒரே எதுகை வருமாறும் அமைக்கலாம்.


    உதாரணங்கள்
    இல்லம்


    வீடே கலகல வென்றந் நாட்களிலே
    ஊடாடும் கூட்டம் குடும்பமென
    பின்னர் பிள்ளை தனிக்குடும்பம்
    இன்றோ ஓர்பிள்ளை பெண்
    நரைமுது பெற்றோர் தனி
    திரைகடல் தாண்டிக்
    கல்விவேலை
    இல்லம்
    இல்.


    பணம்


    மழைப்பொழிவு மும்மாரி அந்நாளில்
    விழைபொருள் பணமென வீணர் இந்நாள்
    கொலையும் கொள்ளையும் கொள்கையென
    நிலையிலா மாந்தராய் வாழ்க்கை
    கனவின் இலக்கு பணம்
    நனவின் நன்மை
    பணப் பற்று
    பணமுதல்
    பணம்.


    --ரமணி, 27/12/2014


    *****


    சிவன்
    (nonet: ஒன்பான் ஓரசை)


    அஞ்செழுத்தில் நின்று ஆற்றுப் படுத்திப்
    பஞ்ச பூதத் தண்ட மாயவை
    கொள்ளும் உயிரினங்கள் அனைத்திலும்
    உள்ளுறைந் தியங்கும் உண்மையாய்
    உள்ளம் எட்டாத
    வேதப் பரம்பொருள்
    நாதபிந்து
    சிவையாய்ச்
    சிவன்.


    --ரமணி, 28/12/2014


    *****
     
    3 people like this.
    Loading...

  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ============================================================
    03. Monorhyme: ஒற்றை இயைபு
    Pantoum - Wikipedia, the free encyclopedia
    ============================================================
    அளவொத்த அடிகளாக அமைந்து, அடிகளின் இறுதியில் ஒற்றை இயைபு வரவேண்டும்.
    இரண்டு அடிகளுக்கு ஓரெதுகையும் சீர்களிடை பொழிப்பு மோனையும் அமைவது சிறப்பு.


    காலைக் கால்நடை
    (monorhyme: ஒற்றை இயைபு)


    காலைத் தென்றல் காற்றலை யோடும்
    சோலைக் கொடிகள் சொகுசாய் ஆடும்
    மரமும் செடியும் மலரைச் சூடும்
    சுரும்பர் அவற்றைச் சுற்றியே ஓடும்
    கொழுமரம் பின்னும் கொடிகள் கூடும்
    கொழுமரக் கிளையமர் குயில்கள் பாடும்
    குருகின் நடையில் குஞ்சுகள் ஓடும்
    குருகின் இரையைக் குஞ்சுகள் நாடும்
    மாமரக் கிளைகள் வானைத் தேடும்
    மாவிழு நிழலை மணியொளி யூடும் ... 10 ... [மணி = சூரியன்]
    அலவும் உள்ளம் அமைதியை நாடும்
    மலரும் பூக்களின் வண்ணம் நேடும் ... [நேடும் = விரும்பும்]
    நழுவும் காலம் நன்றென ஓடும்
    விழுமனம் அன்றைய வேலையை நாடும்.


    --ரமணி, 28/12/2014


    *****
     
    1 person likes this.
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ============================================================
    04. Cinquain ஐம்பொருள் கட்டு
    ============================================================
    ஐந்து விஷயங்களை ஐந்து வரிகளில் கட்டும் (ஹைக்கூவை ஒத்த) ஒரு கவிதை வடிவம்.
    அந்த வரிகள் இவ்விதம் அமையவேண்டும்.

    முதல் வரி: உரிப்பொருள் (ஒரு சொல்)
    இரண்டாம் வரி: வருணனை (இரு சொற்கள்)
    மூன்றாம் வரி: இயக்கம் (மூன்று சொற்கள்)
    நான்காம் வரி: தாக்கம் (நான்கு சொற்களில் உரிப்பொருள் பற்றிய கவிஞன் உணர்வு)
    ஐந்தாம் வரி: முடிவு (ஒரு சொல்)

    ஆங்கிலக் கவிதை இலக்கியத்தில் இவ்வைந்து வரிகள் சொற்களாகவோ (1-5 சொற்கள்), அல்லது
    அசைகளாகவோ (2-4-6-8-2அசைகள்) எழுதப் படுவன.

    English Examples: word-based:

    Dinosaurs
    Lived once,
    Long ago, but
    Only dust and dreams
    Remain

    Syllable-based:

    Snow
    Lovely, white
    Falling, dancing, drifting
    Covering everything it touches
    Blanket

    தமிழில் பொதுவாக சொற்கள் அமைப்பில் எழுதினால் சொல்ல வந்ததை நன்றாகச் சொல்லலாம்.

    உதாரணங்கள்
    குழந்தை
    தொட்டில் உயிர்
    கைகால் ஆட்டும் விழிக்கும்
    பூச்சுமை களிப்பு தெய்வீகம் பாடு
    என்பின்

    காலம்
    கடிகாரம் நாட்காட்டி
    நழுவும் நிற்கும் விரையும்
    பேராசை எதிர்பார்ப்பு பயம் விரக்தி
    காலன்

    தெய்வம்
    உருவ அருவாற்றல்
    படைத்தல் காத்தல் அழித்தல்
    கண்காட்சி வாய்முணுப்பு உள்ளச்சுமை நம்பிக்கை
    மனிதன்

    --ரமணி, 29/12/2014

    *****

    மேலை நாட்டில் இந்த Cinquain ’ஐம்பொருள் கட்டு’ உத்தியை வைத்து பள்ளிக் குழந்தைகளைச் சின்னஞ்சிறு
    சித்திர வருணனை உணர்வுக் கவிதைகள் எழுதப் பழக்குகின்றனர். அவ்வாறு குழந்தைகள் எழுதியவை சில:

    Watermelon
    Juicy, sweet
    Dripping, slurping, smacking
    So messy to eat
    Yummy

    Ice cream.
    Cold and yummy.
    I love its sweet richness
    as it finds its way into my
    tummy

    My room
    is such a mess.
    Toys all over the place.
    Mom says, 'Clean up!' But I like it
    like this.

    நம் குழந்தைகளையும் வீட்டில் எளிய தமிழில் இவ்வாறு எழுதப் பழக்கலாம்.

    யானை
    பேருடல் துதிக்கை
    தலையாட்டும் தின்னும் பிளிறும்
    அழகு ஆவல் பிரமிப்பு பயம்
    பிள்ளையார்

    பாயசம்
    வெல்லம் முந்திரி
    வழியும் சொட்டும் தித்திக்கும்
    சூடு வாசனை மகிழ்ச்சி கசகச
    அம்மா!

    --ரமணி, 30/12/2014

    *****
     
    1 person likes this.
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ============================================================
    05. Clerihew: வாழ்நகை
    ============================================================
    பிரபல புனைகதை எழுத்தாளராகவும் நகைச்சுவையாளராகவும் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் விளங்கிய
    Edmund Clerihew Bentley என்ற ஆங்கிலேயர் முதலில் புனைந்த நகைச்சுவைக் கவிதை வடிவம் Clerihew.


    ஒருவர் அல்லது ஓர் உரிப்பொருள் பற்றி முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் நகைச்சுவை ஒலிக்க எழுதப்படும்
    இந்த நாலுவரி வடிவத்தைத் தமிழில் வாழ்நகை எனலாம். இந்த வடிவின் தேவைகள்:


    1. முதல் வரியில் உரிப்பொருள் சுட்டப்பட வேண்டும்..


    2. நான்கு வரிகளின் இயைபுத் திட்டம் AA BB.
    இயைபுகள் பொதுவாக வலுவில் அமைவதாக இருக்கும்.


    3. ஒவ்வொரு வரியிலும் எத்தனை வேண்டுமாயினும், எவ்வகையிலும் (ஓரசைச் சீர் உட்பட) இருக்கலாம்.


    4. தளை, தொடைக் கட்டில்லை; இறுதியில் வரும் இயைபே முக்கியம்.


    5. பிரபல மனிதர்கள் அல்லது உரிபொருட்களை நகைச்சுவையாகச் சீண்டுவதே இந்த வடிவின் நோக்கம்.


    Some Clerihew Examples


    Sir Christopher Wren
    Said, "I am going to dine with some men.
    If anyone calls
    Say I am designing St. Paul's."


    John Stuart Mill,
    By a mighty effort of will,
    Overcame his natural bonhomie
    And wrote Principles of Political Economy.


    The Art of Biography
    Is different from Geography.
    Geography is about Maps,
    But Biography is about Chaps.


    தமிழில் Clerihew: வாழ்நகை உதாரணங்கள்:


    நடிகை அம்சவல்லி
    வாயெல்லாம் பல்லி
    நடிக்கச் சென்ற கார் வாடகை
    கிடைத்த வேடம் தாடகை!


    நாயர் கடை ராயர் கடை
    சூடான தேநீர் இட்லி வடை
    பரபர விற்பனையா? காரணம் நீர்!
    ஆம், நீரையா நீர்!


    (ஓர் சமஸ்க்ருத நகைச்சுவைச் செய்யுள் தமிழில்)


    உடையே உயர்வென்று சும்மாவா சொல்வது?
    கடைந்த பாற்கடல் தந்த செல்வமெது?
    அரிசனப் பட்டணிந்த அரிக்கோர் நாரி
    அரையில் கோவணத்தான் அரனுக்கோ காரி!


    --ரமணி, 10/01/2015


    *****
     
    1 person likes this.
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சமஸ்கிருத நகைச்சுவை


    வணங்குவனே மருத்துவரே!
    இயமனின் தம்பியாக உம்மை நெஞ்சில் இருத்துவனே!
    உயிரைக் கொள்வது இயமனின் குணம்
    நீர் கொள்வதோ உயிருடன் பணம்!


    அம்புயம் பிரமனும் பாற்கடல் அரியும்
    வெண்பனி அரனும் உறங்குதல் தெரியும்
    மஞ்சம் துஞ்சாதவர் அஞ்சுவதேன் ஆச்சி?
    காரணம் மூட்டைப் பூச்சி!


    வறுமையே!
    உன்னால் எனக்கோர் அதிசய சக்தியுறும் பெருமையே!
    உலகில்நான் காண்பதென எல்லாரும்
    உலகில் என்னைக் காண்பதில்லை யாரும்!


    கிழி துணியை! குடத்தை உடை!
    கழுதைமேல் செல்வாய் நடை!
    ஏடா கூடமாக ஏதோ செய்து
    நீடுலகில் புகழை எய்து!


    --ரமணி, 11/01/2015


    *****
     
    1 person likes this.
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    06. Couplet இயைபுக்-குறள்-வெண்செந்துறை

    ஆங்கிலக் கவிதை யாப்பிலக்கணத்தில் Couplet என்பது:

    A pair of lines of metre in poetry.
    Couplets usually comprise two lines that rhyme and have the same metre.
    Couples can be closed, where the meaning stops with a grammatical pause at the end of each line;
    or run-on (or open), where the meaning of the first line continues to the second.

    இங்ஙனம், Couplet என்பது நம் தமிழ் யாப்பிலக்கணத்தில் குறள் வெண்பாவின் இனமாகிய
    குறள் வெண்செந்துறையே அன்றி வேறல்ல. குறள் வெண்செந்துறையில் அளவொத்த
    இரண்டு அடிகள் எவ்வகைத் தளையும் சீரும் பெற்றுப் பொருள் முடிவுறும் ஓர் பாவினம்.
    (அளவொத்த என்பது இரண்டு அடிகளிலும் சீர் எண்ணிக்கை ஒன்றுபோல் அமைதலாகும்).

    ஆங்கிலக் Couplet-ஐத் வடிவில் தமிழில் எழுதும் போது இரண்டு அடிகளும் ஒரே இயைபைப் பெறுதல் வேண்டும்.
    எனவே, Couplet வடிவைத் தமிழில் ’இயைபுக்-குறள்-வெண்செந்துறை’ என்போம்.

    *****

    பயன்பாடு

    பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கவிஞர் Alexander Pope, couplet வடிவினைத் தம்
    கவிதைகளில் பெரிதும் பயன்படுத்தினார். சில உதாரணங்கள்:

    True wit is nature to advantage dress'd;
    What oft was thought but ne'er so well expressed.

    Nature and Nature's laws lay hid in night;
    God said, "Let Newton be!" and all was light.

    Good-Nature and Good-Sense must ever join;
    To err is Humane; to Forgive, Divine.

    Nay, fly to Altars; there they'll talk you dead;
    For Fools rush in where Angels fear to tread.

    Closed Couplet வடிவைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் Epigram எனப்படும்
    அங்கதப் பொன்மொழிகள் எழுதினர்.

    What is an Epigram? a dwarfish whole,
    Its body brevity, and wit its soul.
    --Samuel Taylor Coleridge ("Epigram", 1809)

    Here lies my wife: here let her lie!
    Now she's at rest -- and so am I.
    --John Dryden

    I'm tired of Love: I'm still more tired of Rhyme.
    But Money gives me pleasure all the time.
    --Hilaire Belloc

    ஆங்கிலக் Couplet-ஆன இயைபுக்-குறள்-வெண்செந்துறையில் நாம் இதுபோன்ற Epigrams--அங்கதப் பொன்மொழிகள் அமைக்கலாம்.

    ஞானம்

    கானம் அதிர்வது பூமி
    வானம் மோனச் சாமி!

    சிவமென வெண்ணொளிக் கதிராம்
    சிவையென வெம்மைக் கதிராம்.

    மூச்சின் இயக்கம் மேனி
    மூச்சை இயக்குவன் ஞானி.

    கண்ணில் வெறுமனே காட்சி
    கண்பின் உறுமே மாட்சி!

    இரையைத் தேடுதல் குன்ற
    இறையைத் தேடுதல் ஒன்றும்.

    தன்னில் தனதைப் பிரிக்க
    மின்னும் ஞானம் புரிக்கும்.

    --ரமணி, 12/01/2015

    *****

    அல்லது இது போன்று ஓர் உரிப்பொருள் பற்றிப் பல இணையடிகளில் ஓடும் கவிதையாக அமைக்கலாம்.

    காதல்

    முன்பின் தெரியா முகத்தில் எழுந்தது
    அன்பின் விதையாய் அகத்தில் விழுந்தது.

    ஒருவிதை யிருவரின் உள்ளம் விளைக்கும்
    கருவது எழுந்தே கனவில் திளைக்கும்.

    கனவின் கிளர்ச்சி கண்களில் தெரியும்
    தினவுறும் மேனி தீண்டிச் சொரியும்.

    இன்னும் இன்னும் என்றே விழுங்கும்
    அன்பின் மொழியில் அறிவது மழுங்கும்.

    தன்னை இழக்கத் தணலுறும் வேள்வியில்
    அன்னை தந்தை அருளது கேள்வியில்.

    கனவாய் நனவாய்க் காதல் ஆமோ
    மனமுறிந் தேதான் மாயமாய்ப் போமோ?

    --ரமணி, 12/01/2015

    *****

    மேலுள்ளவை முறையே மூன்று, நான்கு சீர்களில் அமைந்த இணையடிகள்.
    இவற்றை ஐந்து அல்லது அதற்கு மேற்படும் சீரடிகளாகவும் எழுதலாம்.
    சீர்கள் அதிகம் வரும் போது ஒலிநயத்துக்கு இடையே பொழிப்பு மோனைகள் சிறக்கும்.

    *****
     
    1 person likes this.
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    =========================
    07. Sestina: பின்னல்
    =========================
    செஸ்டினா எனப்படும் ஆங்கிலப் பாவடிவத்திற்குத் தமிழில் ’பின்னல்’ என்று அழகாகப் பெயரிட்டு,
    கவிமாமணி இலந்தை இராமசாமி யவர்கள் இந்த வடிவைத் தமிழில் நிறுவுவதற்காக இலக்கணத்தைத்
    தம் சந்தவசந்தம் கூகுள் குழுமத்தில் கொடுத்துள்ளார்.

    மேல்விவரம்:
    https://groups.google.com/forum/#!topic/santhavasantham/6DX9G1nt7aA

    செஸ்டினா என்னும் ஆங்கிலப் பாவடிவம் மொத்தம் 39 அடிகள் கொண்டு இலங்குவது.
    இதன் இலக்கணம் பின்வருமாறு:

    1. ஆறடி கொண்ட ஆறு செய்யுட்களும், மூன்றடி கொண்ட ஈற்றுச் செய்யுளுமாக
    மொத்தம் 39 அடிகள். ஈற்றுச் செய்யுளுக்கு envoi--முடிப்பு என்று பெயர்.

    2. ஆங்கில மரபில் முதற் செய்யுளின் அடியீற்றில் வரும் ஆறு இயைபுகளும் மற்ற
    செய்யுட்களில் ஒரு பின்னலாகக் கீழ்வரும் முறையில் அமையும்.

    செய்யுள் 1: 123456
    செய்யுள் 2: 615243
    செய்யுள் 3: 364125
    செய்யுள் 4: 532614
    செய்யுள் 5: 451362
    செய்யுள் 6: 246531
    செய்யுள் 7: 12-34-56 (envoi) (முடிப்பு: மூன்று அடிகள், அடிகளுக்குள் இயைபு)

    இப்படிப் பின்னல் 123456 என்று தொடங்கி மீண்டும் அதே நிரலில்
    ஈற்றடியில் முடிவது காண்க.

    பின்னலைத் தமிழ் மரபில் புனையும் போது:

    1. அடிகள் எல்லாம் அளவொத்து, மூன்று முதல் பல சீர்கள் வருமாறு அமைக்கலாம்.
    அடிகளின் இயல்பைப் பொருத்து பாடலை இவ்வாறு பெயரிடலாம்:

    வஞ்சி விருத்தப் பின்னல்: சீர்கள் 3
    அகவற் பின்னல்: சீர்கள் 4
    கலித்துறைப் பின்னல்: சீர்கள் 5.
    ஆசிரிய விருத்தப் பின்னல்: சீர்கள் 6-ம் அதற்கு மேலும்

    2. அடிகளின் ஈற்றில் வரும் இயைபுகளுக்கு பதில் அடிகளின் முதலில் ஒரே
    எதுகையாக வந்து இவை மற்ற அடிகளில் பின்னலாக வருமாறு அமைக்கலாம்.

    3. ஈற்றடியின் இறுதித் சீர் ஏகாரத்தில் முடியும்.

    செஸ்டினாவின் ஆங்கில உதாரணங்களுக்குக் கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கவும்:
    Sestina - Wikipedia, the free encyclopedia

    பின்னலின் தமிழ் உதாரணங்களுக்கு இந்த சுட்டி:
    https://groups.google.com/forum/#!topic/santhavasantham/6DX9G1nt7aA

    இனி, வஞ்சி விருத்தப் பின்னலாக அடியேன் புனைந்த பாடல் கீழே:

    கண்ணன் வண்ணம்
    (வஞ்சி விருத்தப் பின்னல்)

    மூலச் சொற்கள்
    அரித்தான், சரித்தான், வரித்தான், பிரித்தான், விரித்தான், சிரித்தான்

    1. குழந்தை

    வெண்ணை கேட்டே அரித்தான்
    வெண்ணைக் கலயம் சரித்தான்
    வெண்ணையை வாயில் வரித்தான் ... [வரித்தான் = பூசினான்]
    வெண்ணைக் கையைப் பிரித்தான்
    வன்னம் காட்டியே விரித்தான்
    சின்னக் கண்ணன் சிரித்தான்! ... 123456

    2. கனவு நாயகன்

    ராதை அருகில் சிரித்தான்
    மாதவள் நெஞ்சினை அரித்தான்
    வண்ணக் கனவுகள் விரித்தான்
    கண்ணில் பிரிந்தே சரித்தான் ... [சரித்தான் = வசித்தான்]
    நனவில் கனவைப் பிரித்தான்
    மனதில் அவளை வரித்தான்! ... 615243

    3. சிறுவன்

    கோகுலந் தன்னை வரித்தான்
    ஆகுலம் நீங்கச் சிரித்தான் ... [ஆகுலம் = மனக்கலக்கம்]
    உரியினில் வெண்ணையைப் பிரித்தான்
    திருடியே நெஞ்சினை அரித்தான் ... [அரித்தான் = கவர்ந்தான்]
    கவலை யாவும் சரித்தான்
    உவந்தோர்க் குள்ளம் விரித்தான்! ... 364125

    4. சாரதி

    அருநெறி இஃதென விரித்தான்
    அருச்சுனன் தோழமை வரித்தான்
    அருச்சுனன் தேரைச் சரித்தான்
    வருவதைக் கண்டவன் சிரித்தான்
    கன்னன் புண்ணியம் அரித்தான்
    பின்னர் அவனுயிர் பிரித்தான்! ... 532614

    5. உலகவேந்தன்

    கனியும் காயும் பிரித்தான்
    மனிதர் எல்லை விரித்தான்
    இருளின் மயலாய் அரித்தான்
    மரணம் இயல்பென வரித்தான் ... [வரித்தான் = எழுதினான்]
    இயற்கை அழகில் சிரித்தான்
    செயற்கை ஆளுமை சரித்தான்! ... 451362

    6. பரம்பொருள்

    வானை பூமியில் சரித்தான்
    ஞானம் மாயை பிரித்தான்
    அறிந்தேன் என்றால் சிரித்தான்
    அறிவது வேண்டில் விரித்தான்
    தத்துவம் தானென வரித்தான்
    பத்தியில் மனதை அரித்தான்! ... 246531

    7. ஆசான்

    மனதை அரித்தான் மமதை சரித்தான் ... 12
    தனிமை வரித்தான் தானைப் பிரித்தான் ... 34
    முனைவது விரித்தான் மோனமாய்ச் சிரித்தானே! ... 56

    --ரமணி, 31/01/2015, கலி.17/10/5115


    *****
     
    1 person likes this.
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    08. Villanelle/villanesque): மீள்வரிப் பள்ளு
    Ref: Villanelle - Wikipedia, the free encyclopedia

    ஆங்கில யாப்பில் இந்த Villanelle பாவடிவம் எளியோர் பாடும்
    பாட்டாகத் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமாகி,
    இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு பாவடிவமாகும்.

    இதன் வடிவமைப்பு இவ்வாறு:

    01. முதலில் மூவடிச் செய்யுட்கள் ஐந்து.

    02. இறுதியாக ஒரு நாலடிச் செய்யுள்.
    இங்ஙனம் மொத்தம் 19 அடிகள்.

    03. முதற் செய்யுளின் ஒன்றாம் மூன்றாம் அடிகள் பல்லவியாக
    மாறிமாறி மற்ற செய்யுட்களின் ஈற்றடியாக வரும்.

    04. முதற் செய்யுளின் இயைபுகள் A1bA2..
    அதாவது, அடிகள் ஒன்றும் மூன்றும் ஓரியைபும் (A)
    நடுவில் உள்ள இரண்டாம் அடி வேறு இயைபும் (b).

    05. A1 அடியாவது செய்யுட்கள் இரண்டிலும் நான்கிலும் பல்லவி.
    இதேபோல், A2 செய்யுட்கள் மூன்றிலும் ஐந்திலும் பல்லவி.
    இந்தப் பல்லவிகள் அவை வரும் செய்யுளின் ஈற்றடியாக இருக்கும்.

    06. இரண்டு முதல் ஐந்து வரையுள்ள மூவடிச் செய்யுட்களின்
    இயைபுகள் abA1 அல்லது abA2 என்று அமையும். அதாவது,
    முதலடி இயைபு பல்லவி அடியினுடையது போலவும் (a),
    இரண்டாமடி இயைபு முதற்செய்யுளில் நடுவடி இயைபு
    போலவும் (b) அமையும்.

    07. இறுதியாக அமையும் நாலடிச் செய்யுளின் இயைபுகள் abA1A2.
    அதாவது, பல்லவிகள் வரிசையாக இறுதி இரண்டடிகளிலும்,
    முதலடி இயைபு பல்லவியில் வருவது போன்றும் (a), இரண்டாமடி இயைபு
    முன்வந்த செய்யுட்களின் நடுவடியில் வருவது போலவும் (b) அமையும்.

    08. இப்படியாக இந்த வடிவத்தின் மொத்தம் 19 அடிகளின்
    இயைபுத் திட்டம் இது: A1bA2 abA1 abA2 abA1 abA2 abA1A2.

    09. இதன் ஆங்கில யாப்பு பொதுவாக ஐந்துசீர் அடிகளாக,
    அதுவும் iambic pentameter (-/ x 5)-ஆக இருக்கும்.
    தமிழில் நாம் நாற்சீர் அளவடிகளைப் பயன்படுத்தலாம்.

    10. தமிழ் மரபில் எழுதும் போது:
    எப்படியும் பல்லவிகள் அமைவதால், இயைபுகளுக்கு பதில்
    அடியெதுகைகளையும் பொழிப்பு மோனைகளையும் பயன்படுத்தலாம்.

    அல்லது எதுகை-மோனையின்றி இயைபுக்கு மட்டும் முக்கியத்துவம்
    கொடுத்து எழுதலாம்.

    அல்லது எதுகை-மோனை-இயைபுகளைக் கலந்தும் எழுதலாம்.

    ஒரு Villanelle வடிவ ஆங்கிலப் பாடல் கீழே:

    Do not go gentle into that good night
    Dylan Thomas

    Do not go gentle into that good night, Refrain 1 (A1)
    Old age should burn and rave at close of day; Line 2 (b)
    Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)

    Though wise men at their end know dark is right, Line 4 (a)
    Because their words had forked no lightning they Line 5 (b)
    Do not go gentle into that good night. Refrain 1 (A1)

    Good men, the last wave by, crying how bright Line 7 (a)
    Their frail deeds might have danced in a green bay, Line 8 (b)
    Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)

    Wild men who caught and sang the sun in flight, Line 10 (a)
    And learn, too late, they grieved it on its way, Line 11 (b)
    Do not go gentle into that good night. Refrain 1 (A1)

    Grave men, near death, who see with blinding sight Line 13 (a)
    Blind eyes could blaze like meteors and be gay, Line 14 (b)
    Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)

    And you, my father, there on the sad height, Line 16 (a)
    Curse, bless, me now with your fierce tears, I pray. Line 17 (b)
    Do not go gentle into that good night. Refrain 1 (A1)
    Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)

    தமிழ் மரபில் நான் புனைந்த Villanelle: ’மீள்வரிப் பள்ளு’ உதாரணம் கீழே

    காதலும் போரும்
    (அகவற் றாழிசை, அகவற்பா வடிவில் மீள்வரிப் பள்ளு)

    காதல் போரில் யாவும் முறையே
    மோதலும் உண்டு முத்தமும் உண்டு
    ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

    சேதம் கொள்ளும் சிந்தை சிறையே
    போதின் உள்ளே புகுமே வண்டு
    காதல் போரில் யாவும் முறையே.

    போதம் என்பது பொய்மை உறையே
    காதில் சொல்லும் சொல்கற் கண்டு
    ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

    வாதம் செய்தே வெல்வதும் நிறையே
    ஏதும் செய்யும் துணிவும் உண்டு
    காதல் போரில் யாவும் முறையே.

    சாதல் முடிவெனில் காதல் குறையே
    ஓதல் இன்றியே ஒழுக்கம் உண்டு
    ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

    வீதியில் கண்டால் வீட்டில் அறையே!
    பேதைமை உண்டு பேடிசம் உண்டு!
    காதல் போரில் யாவும் முறையே!
    ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

    [பேடிசம் = மாய்மாலம், பாசாங்கு]

    --ரமணி, 10/02/2015

    *****


    அறிஞர்களும் அன்பர்களும் இந்த ’மீள்வரிப் பள்ளு’ வடிவத்தில் பல்வேறு உரிப்பொருள்களிலும்
    இசையுடன் கூடவும் பாக்கள் புனைந்து பார்க்கலாமே?


    *** *** ***
     
    1 person likes this.
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    09. Balliol rhyme: நகைத்துளி
    Ref: Balliol rhyme - Wikipedia, the free encyclopedia

    1875-ஆம் வருடம் Balliol College, Oxford-இல் அறிமுகமான
    இந்த ஆங்கில பாவடிவம் ஒருவரைப் பற்றி நாலே வரிகளில்
    நகைச்சுவையாக எழுதப்படும் பாடல்.

    தமிழ் மரபில் இதன் வடிவமைப்பு இவ்வாறு இருக்கலாம்:

    01. நான்கு அடிகள், AABB இயைபில்.
    ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்.

    02. முதலிரு அடிகள் இணையில் ஒருவரது பெயர் வரும்.

    03. மூன்று-நான்கு அடிகள் இணையில் அவரது இயல்பைக்
    குறைகூறும் விதமாக ஒரு நகைச்சுவைக் குறிப்பு இருக்கும்.

    04. இவ்வகைப் பாக்கள் பொதுவாக ஒருவர் தன்னைப் பற்றி
    ஹாஸ்யமாகச் சொல்லுவதுபோல் அமையும். படர்க்கையில் குறித்தும்
    எழுதலாம். பாடலில் ஒருவரைப் பற்றிய நையாண்டி இருப்பது முக்கியம்.

    05. சீர்களிடையே தளைக் கட்டுப்பாடு இல்லை.
    இரண்டடிக்கு ஓரெதுகை வருவது முக்கியம்.
    சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் வரும் பொழிப்பு மோனை மேலும் மெருகூட்டும்.

    Examples in English

    My name is George Nathaniel Curzon,
    I am a most superior person.
    My cheeks are pink, my hair is sleek,
    I dine at Blenheim twice a week.

    My name is Michael Andrew Gove
    At private school I found I throve
    And so all children must agree
    To learn Latin by rote like me.

    *****

    Clerihew: வாழ்நகை என்று முன்னர் நாம் கண்ட யாப்பு வடிவத்திற்கும்
    Balliol rhyme: நகைத்துளி-க்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்

    உரிப்பொருள் எதுவாகவும் இருந்து முற்றிலும் எதிர்பாராத கோணத்தில்
    நகைச்சுவை ஒலிக்க அளவொத்த அடிகள் நான்கில் எழுதப் படுவது,
    Clerihew: வாழ்நகை.

    ஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது கவிஞர் ஒருவரைப் பற்றியோ
    நகைச்சுவையாக எழுதப்படும் நாற்சீர் அடிகள் நான்கில் அமைவது,
    Balliol rhyme: நகைத்துளி

    *****

    தமிழில் உதாரணங்களாக நான் புனைந்தது கீழே.

    Balliol rhyme: நகைத்துளி: தமிழில்
    (ரமணி)


    எளிதில் காண்பதல்ல என்பெயர், ஏடகம்
    களித்தே நான்மேடையில் காண்பது நாடகம்
    அருமை நண்பர்கள் அழைக்கும்பேர் ஏடாகூடம்
    ஒருமையில் நானுமென் உபயமாக வாடாபோடா!

    *****

    ஏடு சொல்லும் என்பெயர் அந்தோணி
    வீடு என்றுபோய் வீழத்திருத் தந்தோணி
    சங்கத் தமிழ்ப்பாக்கள் சகலமும் பிடிக்கும்
    சிங்கப் பல்லவை செப்புதல் தடுக்கும்!

    *****

    அழகிய தமிழ்மகள் அமரா வதியாள்
    பழகியும் ஆடலிற் பாதம் பதியாள்
    அடவு முத்திரை அபிநயம் நவரசம்
    நடையில் குறையும் நளினமோர் அவசரம்!

    *****

    கோலுடன் வருவாள் கோமுப் பாட்டி
    ராமு-அவள் பையனுக்கு ராதா பெண்டாட்டி!
    வாயைக் கொடுத்து வம்பை வாங்காது
    பாயில் பாட்டி படுத்துத் தூங்காது!

    *****

    என்றும் இளமை என்றன் ரகசியம்
    இன்றே அறிவீர் இதுமிக அவசியம்
    ஒருவன் எனக்கு ஒருத்தி இல்லை
    வருமுன் காத்தேன் வந்திலை தொல்லை!

    *****

    அரசியல் வாதி அய்யா சாமி
    பரிசிலாய்க் கேட்பது ’பையைக் காமி’!
    வாயைத் திறந்தால் வசைமாரி பொழிந்தார்
    நோயில் படுத்து நொந்தே அழிந்தார்.

    *****

    கதையெழுத் தாளர்நான் காசி நாதன்
    எதையும் கதையாய் எழுதும் தூதன்
    கட்டைப் பேனாவில் கற்பனை வந்தது
    தட்டும் விசைகளில் தயங்கி நின்றது.

    --ரமணி, 27-28/02/2015

    *****
     
    1 person likes this.
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    10. Sonnet: சானட்

    பதினான்கு அடிகளில் அமையும் சின்னப் பாடலான சானட் ஆங்கில யாப்பின்
    முக்கிய வகைகளில் ஒன்றாக அது தோன்றிய நாள்தொட்டு விளங்கி வருகிறது.
    இத்தாலிய இலக்கியத்தில் 12-13-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி Petrarch என்ற
    கவிஞரால் பிரபலமான இந்த சானட் வடிவத்தை ஆங்கிலத்தில் Sir Thomas Wyatt
    என்பவர் 15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அறிமுகப் படுத்தினார். ஆங்கில
    இலக்கியத்தில் இன்று வரை, புகழ் பெற்ற கவிஞர்களில் பெரும்பாலோர் சானட்
    வடிவத்தில் கவிதைகள் புனைந்துள்ளனர்.

    இத்தாலிய சானட் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றி William Shakespeare
    ஆங்கிலத்தில் தம் புகழ்பெற்ற 154 சானட்களை எழுதினார். இப்படியாக, சானட்
    ஆங்கிலத்தில் இரண்டு வடிவங்களில் எழுதப் படுகிறது: Italian or Petrarchan format,
    and English or Shakespearean format.

    சானட் யாப்பு வடிவின் புகழுக்கு முக்கிய காரணம், அந்த வடிவத்தில் கவிதை
    புனைவதில் உள்ள சவால்தான். பதினாலு வரிகளில் கவிஞன் தன் கருத்தை,
    உள்ளுணர்வை, இயற்கை சார்ந்த உருவகங்களோடு வாசகரிடம் கொண்டு
    சேர்க்கவேண்டும். சானட் கவிதைக் கருத்தாகக் காதல், போர், மரணத்துவம்,
    மாற்றம், துன்பம் போன்றவை அமையலாம். இந்த உரிப் பொருள்களில் கவிஞன்
    பொதுவாக ஒரு தனிமை உணர்வு எழுமாறு கவிதைகள் புனைவான். (இதனால்
    தான் தமிழில் பாரதியார் தமிழில் தான் எழுதிய சானட் கவிதைக்குத்
    ’தனிமை இரக்கம்’ என்று தலைப்பிட்டார் போலும்.)

    முதலில் ஆங்கில சானட் வகைகளின் இலக்கணத்தைப் பார்ப்போம்.
    பின்னர் இவற்றைத் தமிழ் மரபில் அறிமுகப்படுத்தும் முறைகளை ஆராய்வோம்.

    இரண்டு வடிவத்திற்கும் பொதுவில் உள்ள கூறுகள் இவை:

    1. ஐந்து (லகு-குரு) சீர் கொண்ட அடிகள், அதாவது iambic pentameter

    2. முதல் எட்டு அடிகளில் கவிதையின் மையக் கருத்து இயற்கை உருவகங்களுடனும்
    மற்ற கவிதை அணிகளுடனும் அறிமுகப் படுத்தப்பட்டு விவரிக்கப்படும்.

    3. ஒன்பதாம் அடியில் volta (turn) என்னும் திருப்பம் இருக்கும்.
    இந்தத் திருப்பம் கவிதைக் கருத்திலோ, செய்தியிலோ, காட்சியிலோ,
    ஒலியிலோ அல்லது வேறொரு கூறிலோ இருக்கலாம்.

    4. முடிவுரையாக ஒரு செய்தி வாசகனுக்கு அறிவுறுத்தப்படும்.
    அது பொதுவாக முதற் சொன்ன உரிப்பொருள்/உணர்வின்
    இப்போதைய நிலையெனக் கவிஞன் கருதுவதாக இருக்கும்.

    Italian or Petrarchan sonnet

    1. Octave எனப்படும் முதல் எட்டு அடிகள் கவிதைக் கருவை
    விதைத்து வளர்க்கும், .

    2. Sestet எனப்படும் இறுதி ஆறு அடிகள் மேற்சொன்ன
    திருப்பத்தை ஏற்படுத்திக் கவிதையை முடித்துவைக்கும்.

    3. Rhyme scheme for ocatave: abba, abba
    4. Rhyme scheme for the sestet: cde, cde or cdc, dcd

    English/Shakespearean/Elizebethan sonnet

    1. Quatrains எனப்படும் நான்கு அடிகளை உடைய பத்திகள்
    மூன்றுடன் இறுதியாக ஒரு rhyming couplet என்னும் இயைபுடன்
    கூடிய இரண்டு அடிகள்.

    2. Quatrain 1 மையக் கருத்தைத் தொடங்கிவைக்கும்.
    Quatrain 2 அதனை விரிக்கும்.
    Quatrain 3 -இன் முதல்வரியில் முன் சொன்னதற்கு
    மாறாக ஒரு திருப்பம் தொடங்கிச் சொல்லப்படும்.
    Final rhyming couplet முடிவுரையாக அமையும்.

    3. Rhyme scheme: abab, cdcd, efef, gg

    ஆங்கில சானட் உதாரணங்கள்

    ஆங்கில இலக்கியத்திலுள்ள இரண்டு சானட்களைக் கொஞ்சம் ஆராய்வோம்.
    முதலில், ஸ்டெல்லா என்ற தன் (உருவகக்) காதலிக்காக
    ஒரு கவிதை எழுத முயல்வதில் தாம் படும் பாட்டை விவரிக்கும்
    Sir Philip Sidney-யின் இத்தாலிய வகை சானட்.

    இந்தப் பாடலின் ஒன்பதாம் அடியில் வரும் திருப்பத்தையும்
    அதன் பின் முடிவாக வரும் இறுதி அடியையும் நோக்குக.

    Sir Philip Sidney: Italian sonnet form
    "Loving in truth..."

    Loving in truth, and fain in verse my love to show,
    That the dear she might take some pleasure of my pain,
    Pleasure might cause her read, reading might make her know,
    Knowledge might pity win, and pity grace obtain,
    I sought fit words to paint the blackest face of woe:
    Studying inventions fine, her wits to entertain,
    Oft turning others' leaves, to see if thence would flow
    Some fresh and fruitful showers upon my sunburned brain.

    But words came halting forth, wanting Invention's stay;
    Invention, Nature's child, fled stepdame Study's blows;
    And others' feet still seemed but strangers in my way.
    Thus, great with child to speak, and helpless in my throes,
    Biting my truant pen, beating myself for spite:
    "Fool," said my Muse to me, "look in thy heart, and write."

    ரத்தினச் சுருக்கமாகப் பாடல் உரைநடை வடிவில் கீழே:
    Sidney - Astrophil and Stella - Sonnets 1-27

    Loving, and wishing to show my love in verse,
    So that Stella might find pleasure in my pain,
    So that pleasure might make her read, and reading make her know me,
    And knowledge might win pity for me, and pity might obtain grace,
    I looked for fitting words to depict the darkest face of sadness,
    Studying clever creations in order to entertain her mind,
    Often turning others’ pages to see if, from them,
    Fresh and fruitful ideas would flow into my brain.

    But words came out lamely, lacking the support of Imagination:
    Imagination, nature’s child, fled the blows of Study, her stepmother:
    And the writings (‘feet’) of others seemed only alien things in the way.
    So while pregnant with the desire to speak, helpless with the birth pangs,
    Biting at my pen which disobeyed me, beating myself in anger,
    My Muse said to me ‘Fool, look in your heart and write.

    *****

    கவிஞன் தன்னுள் பார்த்தே எழுதினால்தான் அது கவிதையாகும்
    என்று ஸிட்னி சொன்னாரா? கீழ்வரும் பாடலில் ஷேக்ஸ்பியர்
    தாம் எழுதும் கவிதை என்றும் நிற்கும் அதை ’நீவிர்’
    என்றும் படிப்பீர்கள் என்று (செருக்குடன்?) சொல்கிறார்.

    William Shakespeare: English/Shakespearean sonnet form
    Shall I compare thee to a summer’s day?

    Shall I compare thee to a summer’s day?
    Thou art more lovely and more temperate:
    Rough winds do shake the darling buds of May,
    And summer’s lease hath all too short a date:

    Sometime too hot the eye of heaven shines,
    And often is his gold complexion dimm’d;
    And every fair from fair sometime declines,
    By chance, or nature’s changing course untrimm’d;

    But thy eternal summer shall not fade,
    Nor lose possession of that fair thou ow’st,
    Nor shall death brag thou wander’st in his shade,
    When in eternal lines to time thou grow’st;

    So long as men can breathe, or eyes can see,
    So long lives this, and this gives life to thee.

    இந்தப் பாடலில் வரும் ’நான்’ என்பவர் பாடல் வரிகளைச் சொல்லும் ஸ்பீக்கர்,
    பாடல் வரிகளை எழுதியவர், அதாவது கவிஞர் என்ற இரு நோக்கிலும்,

    பாடல் குறிக்கும் ’நீ/நீவிர்’ என்பவர் ஒரு பெண் (கவிஞரின் காதலி?) அல்லது
    ஆண் (கவிஞரின் புரவலர்) அல்லது வாசகர்களாகிய நாம் என்ற மூன்று
    நோக்கிலும் கவிதையைப் படித்துப் பார்த்தால், புதுப்புது அர்த்தங்கள் தோன்றும்.
    அதுதான் ஷேக்ஸ்பியர்.

    இந்தப் பாடல் பற்றி ஆராயும் விளக்கத்தை இங்கே காண்க:
    Sonnet 18

    ஆங்கிலத்திலோ, தமிழிலோ சானட் எழுத முயல்வோர் அவசியம் இந்த இரு
    பாடல்களையும் படித்துப் புரிந்துகொண்டு இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு
    எழுதவேண்டும்.

    சானட்களுக்கென்றே ஓர் வலைதளம்:
    Sonnet Central
    Shakespeare's Sonnets
    Analysis of Shakespeare's Sonnets and Paraphrase in Modern English

    தமிழில் இந்த சானட் வடிவத்தை அமைப்பது பற்றி இனி ஆராய்வோம்.

    *****
     
    1 person likes this.

Share This Page