கவிதை சோலையில் கானம் பாடிய குயில்களை கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தேடினேன் தேடுகிறேன் தேடுவேன் தமிழுக்கு இல்லையோ ஒருவரும் என்று கண் கலங்கி நின்ற போது புதிய பறவைகள் பல வந்து பாடும் கானங்கள் மிக இனிமை துள்ளி விளையாடும் புள்ளி மான் போல துள்ளி விளையாடுகிறது செந்தமிழ் இங்கே அள்ளி பருகிட வாருங்கள் அன்பு பறவைகளே கவிதை கொண்டு கட்டுவோம் கூடுதனை
வரிகள் அருமை ! வாருங்கள் வாருங்கள் குயில்களே ! உங்களின் கூட்டம் அதிகரித்தால் கூட்டத்தோடு கூட்டமாய் இந்த குட்டிக்காக்கையும் குழுமி குதூகலிக்க காத்திருப்புடன் !! வாழ்த்துக்கள் !!