மதி கொண்டு விதி வெல்லலாம் என்றார் அன்று மாறாய் மதி கொண்டு சதி செய்தார் இன்று செய்திடலாம் நன்மைகள் பல அணு கொண்டு வலியோர் வலிமையை காட்டிட செய்ததோ அணு குண்டு பள்ளியில் கற்ற நூல்கள் யாவும் மறந்தோம் , காலையும் மாலையும் முகநூலிலே புதைந்தோம் கைபேசி இல்லாக் கைகள் உலகில் இல்லை மனம் விட்டு பேச உறவுகளுக்கு நேரமும் இல்லை ஆதி முதல் அவியல் வரை அறிவியல் தான் என நினைத்தோம் அறிவியலின் விந்தையைக் கண்டு வியப்புகள் பல அடைந்தோம் ஊடகங்கள் மூலம் தனி மனிதனாய் வாழ்வை துண்டிக்கத் துணிந்தோம் சுற்றம் அனைத்தையும் மறந்தோம் வாழ்வை வாழாமலே தொலைத்தோம் , அறிவியலின் பெயரால் அழிவினை விதைத்தோம்.. ---நிரஞ்சன்