பழகிய செருப்பு அறுந்தால் கூட பலர் ஒரு நிமிடம் அதை நினைப்பதுண்டு. பல நாள் பேசியும், பழகியும் கூட, பார்க்காமல் உன் போல் செல்பவர் எவருண்டு? கண்கள் உனைக் கண்டு முன்பு மகிழ்ந்ததற்காக, இன்று அழுது தம் பாவம் தீர்த்துக் கொள்ளும்! காதுகளும் உன் சொல்லைக் கேட்பதற்காக, காத்திருந்ததில் தமையே நொந்து கொள்ளும்! நாவோ உன் பெயரை உச்சரித்தற்காக, தீக்கோல் படவும் விரும்பிக் காத்திருக்கும். நாசியும் உன் வாசம் உனர்ந்ததற்காக சிவந்தும், நீர் கோர்த்தும் இயல்பிழந்திருக்கும். ஆயினும் ஐயோ, இப்பாழும் நெஞ்சோ இன்னும் நீ வருவாயெனக் காத்திருக்கும்! நீ வந்தாலோ அனைத்தையுமே மறந்து விட்டு முன்போலவே இன்பம் கொண்டிருக்கும்!
Thanks Periamma for your feedback. Its all about the lover who forgets all mistakes of his / her partner once he / she comes back. -rgs