Dear Mr.Paanzaa, Thanks for your reply. This is not the one I was looking. Thiruppugal written by Arunagiri nather. But Pachai Pathigam written by ThiruGnanasambandar (worshiping Lord Saneeswara) Santhana Kumar
I realised it after going through the famous thirupukazh. My firnd has a copy of Pachai pathigam. I will scan and post it.
Dear Forum member, பச்சைத் திருப்பதிகம் போகம்-ஆர்த்த பூண்-முலையாள் தன்னோடும் பொன்-அகலம் பாகம்-ஆர்த்த பைங்கண்-வேள் ஏற்று-அண்ணல் பரமேட்டி ஆகம்-ஆர்த்த தோல்-உடையன் கோவண ஆடையின்-மேல் நாகம்-ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே தோடு-உடைய காது-உடையன் தோல்-உடையன் தொலையாப் பீடு-உடைய போர்-விடையன் பெண்ணும்-ஓர் பால்-உடையன் ஏடு-உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடு-உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே ஆன்-முறையால் ஆற்ற-வெண்-நீறு ஆடி அணியிழை-ஓர் பால்-முறையால் வைத்த-பாதம் பத்தர் பணிந்து-எத்த மான்-மறியும் வெண்-மழுவும் சூலமும் பற்றிய-கை நான்-மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே புல்க-வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து-அயலே மல்க-வல்ல கொன்றை-மாலை மதியோடு உடன்-சூடி பல்க-வல்ல தொண்டர்-தம்-பொன் பாத நிழல்-சேர நல்க-வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே ஏறு-தாங்கி ஊர்தி-பேணி ஏர்-கொள் இளமதியம் ஆறு-தாங்கும் சென்னிமேல்-ஓர் ஆடு-அரவம்-சூடி நீறு-தாங்கி நூல்-கிடந்த மார்பில் நிரை-கொன்றை நாறு-தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே திங்கள்-உச்சி மேல்-விளங்கும் தேவன் இமையோர்கள் எங்கள்-உச்சி எம்-இறைவன் என்று-அடியே -இறைஞ்ச தங்கள்-உச்சியால்-வணங்கும் தன்-அடியார்கட்கு எல்லாம் நங்கள்-உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே வெஞ்சுடர்த்-தீ அங்கை-ஏந்தி விண்-கொள் முழவு-அதிர அஞ்சிடத்தோர் ஆடல்-பாடல் பேணுவது அன்றியும்-போய் செஞ்சடைக்கு-ஓர் திங்கள்-சூடி திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு-அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே சிட்டம்-ஆர்த்த மும்மதிலும் சிலைவரைத் தீ-அம்பினால் சுட்டு-மாட்டி சுண்ண-வெண்-நீறு ஆடுவது அன்றியும்-போய்ப் பட்டம்-ஆர்த்த சென்னிமேல்-ஓர் பால்-மதியம்-சூடி நட்டம்-ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே உண்ணல்-ஆகா நஞ்சு-கண்டத்து உண்டு-உடனே-ஒடுக்கி அண்ணல்-ஆகா அண்ணல்(வண்ணல்)-நிழல்-ஆர்-அழல் போல்-உருவம் எண்ணல்-ஆகா உள்-வினை-என்று எள்க வலித்து-இருவர் நண்ணல்-ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே மாசு-மெய்யர் மண்டை-தேரர் குண்டர் குணம்-இலிகள் பேசும்-பேச்சை மெய்-என்று-எண்ணி அந்நெறி செல்லன்மின் மூசு-வண்டு-ஆர் கொன்றை-சூடி மும்மதிலும்-உடனே நாசம்-செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன் நண்பு-நல்லார் மல்கு-காழி ஞான-சம்பந்தன்-நல்ல பண்பு-நள்ளாறு-ஏத்து -பாடல் பத்தும் இவை-வல்லார் உண்பு-நீங்கி வானவரோடு-உலகில்-<WBR>உரைவாரே Thank you! I have uploaded the pdf from Project Madurai site - Pls refer 1.49
Dear Sir, THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS By, Santhana Kumar