லலிதா நவரத்தின மாலை ------------------------------------- ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான சத்குரு சரணம் சரணம் ஞானானந்தா சரணம் சரணம் ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம் பூக்கும் நகையாள் புவநேஸ்வரிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினை காக்கும் கன நாயக வாரணமே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே வைரம் ----------- கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுன்கன வான தவம் பெற்றும்தெரியார் நிலை என்னில் அவம் பெருகும் பிழையேன் பேச தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிர பகைவர்க் கெமனாக எடுத்தவளே வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...) நீலம் -------- மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம் நீல திருமேனியிலே நினைவாய் நினைவற்றேளியேன் நின்றேன் வருவாய் வாலைகுமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா...) முத்து --------- முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே முன்னின்றருளும் முதல்வீ சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேரிய நான் தனையன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேருததித் கினை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா...) பவழம் ---------- அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம் பவளம் போழிவாரோ தேம்போழிலாம் இதை செயதவளாரோ எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள் என்னுபவர்க்கருள் என்னமிகுத்தாள் மந்திர வேத மயப்பொருள் ஆனாள் மாதா ஜெயா ஓம் லலிதாம்பிகையே (மாதா...) மாணிக்கம் ---------------- காணக் கிடையா கதியானவளே கருதக்கிடையா கலையானவளே பூனக் கிடையா பொலிவானவளே புனைய கிடையா புதுமைத்தவளே நாணித் திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா...) மரகதம் ----------- மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் சுருதி ஜதி லயமே இசையே சரணம் அர ஹர சிவனென்று அடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம் வரணவ நிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...) கோமேதகம் ----------------- பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாது பயன்குன்றா வரமும் தீமேலிடினும் ஜெய சக்தியென திடமாய் அடியேன் மொழியும் திறமும் கொமதகமே குளிர் வான் நிலவே குழல்வாய் மொழியே தருவாய் தருவாய் மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...) பதுமராகம் --------------- ரஞ்சனி நந்தினி அங்கனி பதும ராக விலாச வ்யாபினி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்திரா கலா தரிராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு ச்ருங்க நிவாசினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகை (மாதா...) வைடூரியம் ---------------- வலையோத்த வினை கலையொத்த மனம் மருளப் பரையாரொலியொத்த விதால் நிலைஎற்றேளியேன் முடியத்தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற்றசைவட் ரனுபூதி பெரும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...) பயன் -------- எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தியெல்லாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வார் அவரே... (மாதா...)
Thank you very much for giving this very nice sloka. It is very easy to recite also. Can take a print out and tell this sloka daily. Regards, Raji
Sai, I just remembered my SIl who chants this every day morning and evening. She is a big devotee of Gnanananda swamigal.
Hi All Can anyone tell for what purpose we have to tell this sloka? when to tell morn or eve? any naivaidyam to give? Radhiga.B
I am giving just what I know. This is an Ambal Slogam and can be chanted both in morning and evening. It can be chanted for the goodness of the whole family.
Dear Raji This லலிதா நவரத்தின மாலை I use to chant after Lalitha sahasranama during Navarathiri days. In Kapali temple every friday at 12 noon "abishegam" times after shasranamam this navarathina malai is chanted by devotees. It will be a great pleasure to participate. Kantha
Dear Kantha Thank you very much. I think I got your reply at an appropriate time since Navarathri is going to start, I will chant this also during this Navarathri. It is nice to know that it is chanted on all Fridays at Kapali Temple. Let me try to participate atleast once.
Dear Raji Since this Navarathina Malai is in Tamil while chanting we will enjoy. And one more sloka is there "Mangala Rupini" if it is chanted whenever we are in deep troble or depressed situation it helps us to think properly. It is also a tamil sloka. In navarathri days will you be chanting "Maheeshasura Marthini" ? kantha