குஞ்சா லாடு -------------------- திருவாலங்காடு சுந்தரேச ஐயர் பெரிய வயலின் வித்வான்.M . S . சுப்பலக்ஷ்மிக்குப் பக்க வாத்யம் இவர்தான். ராகங்களின் சுவையைப் பிழிந்து வழங்குவார்.விஜயவாடாவில் பகல் விருந்து. மாலையில் 6 மணிக்கு M .S கச்சேரி.சுந்தரேச ஐயர் இனிப்பு பிரியர்.விருந்து பலம்.ஐந்தரை மணி வரை அசந்து தூங்கி விட்டார். விருந்தினர் ஒரு டஜன் குஞ்சாலாடு பொட்டலம் கட்டித் தந்தார்கள்.அவற்றை பிடில் பெட்டியில் ஓரங்களிலும் இடுக்குகளிலும் அடைத்து விட்டார்.நேரம் 6 .05 .சதாசிவத்துக்கு ஒரே கோபம்." நேரே போய்க் கச்சேரியை ஆரம்பியும். அப்புறம் கவனித்துக் கொள்கிறேன் "என்றார். ஐயருக்கு ஒரே வெல வெலப்பு." "அண்ணா,கோபிக்கக் கூடாது. சுருதி கலையாமல் தான் இருக்கு. ஒரே நிமிஷம் " என்று பெட்டியை அலாக்காகத் தூக்கி மூடியை ஒரு அழுத்து அழுத்தினார்.மேடை முழுதும் குஞ்சாலாடு மழைதான்.M .S . பட்டுப் புடவையெல்லாம் லட்டு மயம்.கச்சேரியின் இனிமையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. Jayasala 42