நாம் தலை சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் மனித இனத்துக்கு மட்டும் உரியது அல்ல.'தட்டு நிறைய காயும் தொட்டுக் கொள்ள சோறும் ' என்ற health awareness வந்த நாளிலிருந்து காய்கறிகளின் பெருமை உயரத் தொடங்கி விட்டது. எல்லாக் காய்கறிகளின் விலை யும் விண்ணைத் தொட காய்கறிகளுக்கு ஏகப் பட்ட கர்வம்.' யார் சிறந்தவர் ' என்று ஒரு மகா நாடு நடத்தி தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது. வாழைக் காய் : நான் கல்யாணக் காய்கறி.காய்கறிகளின் அரசன்.இல்லற வாழ்க்கை தொடங்கும் திருமணம் முதல், இல்லற வாழ்வைத் துறந்த மா முனிவர் வரை,முதல் ஆண்டு நிறைவு முதல் நீத்தார் நினைவு தினம் வரை பயன்படுவது நான் தான் , வெண்டைக்காய்:'நவ நாகரீக மங்கையின் பிஞ்சு விரல்' என்ற பெருமை கொண்டவள்.கூடையிலுள்ள எங்கள் பிஞ்சு விரலை ஒடித்தாலும் நாங்கள் வருந்துவதில்லை. உடைந்த காய்கள் நாவின் ருசி தூண்ட, உடையாத நாங்கள் மனம் உடையாமல் கூடையிலேயே உயிர்த் தியாகம் செய்கிறோம். பரங்கிக் காய்: நான் தான் கல்யாணப் பரங்கி.திருமணங்களில் பிள்ளையார், வெங்கடசலபதி, சர்ச், மசூதி என்று கலைப் பொருளாகவும் வழிபாட்டுப் பொருளாகவும் மாறிவிடுவேன் பூசணிக் காய்:உடல் பருத்த நான் தரையில் உருண்டு கிடப்பேன்.அமாவாசை நாட்களிலும்,கட்டிடத் திறப்பு விழாக் களிலும் வீதியின் நடுவில் உடைபட்டு மிதிபட்டு, கண் திருஷ்டியைப் போக்கி மக்களை மகிழ்வுறச் செய்யும் தியாகச் செம்மல் .என்னுள் எவ்வளவு விதைகள் தெரியுமா?என் மேனியில் எவ்வளவு பிளவுகள் ( clevages ) உண்டோ அதை 135 ஆல் பெருக்கினால் வருவதுதான் என்னுள் உள்ள விதைகள்.பொறுமை இருந்தால் எண்ணிப் பாருங்களேன். கத்தரிக்காய்: ஆஹா! ஊதா கலர் bottom ,பச்சை வண்ணத்தில் contrast ஆக divided skirt !முழுப் பிஞ்சுக் கத்தரிக்காயை பிளந்து மசாலா அடைத்து வதக்கினால் ருசியோ ருசி ! கீரை"பெரிய கூடை நிறைய கீரை வாங்கினாலும் உடல் சுருங்கி சுவை கூடி சிறிய கிண்ணத்தில் அம்ருதமாய் அமருவேன்.ஒரு கரண்டி கீரை மசியலால் இரும்புக் கரங்களைப் படைத்திடுவேன். ஒரு சின்ன கீரைத் துணுக்காக திரௌபதியின் அக்ஷய பாத்திரத்தில் இருந்த நான் கிருஷ்ணனின் நாவில் பட்ட கணமே துர்வாசர் , அவரது ஆயிரம் சீடர்களின் பசியைப் போக்கினேன். என் பெருமை யாருக்கு வரும்? தேங்காய்:-எல்லாக் கைகளையும் முற்றல் என்று ஒதுக்கித் தள்ளுபவர்கள் கூட 'முற்றல் தேங்காய்' என்றால் விரும்பி வாங்குவார்கள். சின்னக் குடுமியுடன் சிங்காரமாகக் கலசத்தில் கலசத்தில் எழுந்தருளும் என்னை வரலக்ஷ்மியாகவோ, கேதார கௌரி யாகவோ வணங்குகிறார்கள். கொழுக் கட்டையில் பூரணமாக, காய்கறியில் பூத் துருவலாக,சாம்பார், அவியலில் கூட்டணியாக,தாம்பூலக் கவரில் முழுத் தேங்காயாக என்னில் கொப்பரையில் என்னை வித்தாக, இளநீரை உள்ளடக்கி வைத்திருக்கும் கிருமி புகாத sterilized container ஆக- எண்ணற்ற அவதாரம் எடுப்பவன் நான். காய்கறிகள் ஒவ்வொன்றும் தன்னைப் பற்றித் தம்பட்டம் அடிக்க ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது வெங்காயம்.மற்ற காய்கறிகள் " நீ சுத்த சைபர்.உரிக்க உரிக்க ஒன்றுமே மிஞ்சாது. பேசுவதற்கு உனக்கென்ன தகுதி இருக்கிறது என எள்ளி நகையாடின. இது வரை அமைதி காத்த வெங்காயம் மெதுவான, உறுதியான் குரலில் பேசத் தொடங்கியது, " நான் எளிமையானவன் தான். தீபாவளி என்றாலே குழந்தைகளைக் கவரும் வெங்காய வெடியும்,மங்கையரின் எழிலை அள்ளி வீசும் வெங்காய சருகு சேலையும் நினைவிலிருந்து நீங்காதவை. சாதியை எதிர்த்துப் போராடின மாபெரும் தமிழக அரசியல் தலைவர் நாள்தோறும் உச்சரித்த மந்திரம் வெங்காயம் தான். உங்களையெல்லாம் கத்தியால் வெட்டத் தயங்காதவர் கூட ,என்னை நெருங்கினாலே கண்ணீர் சிந்துகிறார்கள்.2010 ஆம் ஆண்டு என்னைப் பற்றி எழுதாத பத்திரிகையே இல்லை.என்னைத் தங்கத்தோடு அல்லவா ஒப்பிட்டார்கள்? உலகின் தலை சிறந்த மருத்துவன் நான்.சாதாரண தொண்டைப் புண் , ஜல தோஷம் முதல், தீவிர இருதய நோய், சர்க்கரை வியாதி,எலும்பு தேய்மானம் , புற்று நோய் உட்பட எல்லா நோய்களுக்கும் அருமருந்து நான் தான். எல்லா சாதி, மத, இன மக்களுக்கும் உற்ற தோழன் நான் தான்.ஏழைகளின் இல்லங்களில் பழையமுதுக்கு துணையாக, நடுத்தரக் குடும்பங்களில் உருளைக் கிழங்குக் காரக் கறியுடன் வெங்காய சாம்பாராக மண ம் வீசுவேன்.வெங்காய பஜ்ஜி, வெங்காய தூள் பகோடா என்று தூள் கிளப்பும் நான் இரவு விருந்துகளில் புலவுடன் ஜோடி சேருவேன்.நான் தனித்து இயங்காமல் team spirit க்கு ஒரு உதாரணம். நீங்கள் கூறியபடி நான் சைபர் தான்.உலகில் காமம் ,குரோதம் , கோபம் போன்ற தீய குணங்களை நீக்கினால் எஞ்சி நிற்கும் பூஜ்யம் என்ற நிர்வாண நிலையை உணர்த்தும் வேதாந்தி நான். இது மட்டுமா? நானே மகாவிஷ்ணுவின் அம்சம் தான்.என்னை நீள வாட்டில் பிளந்தால் சங்காகவும் , குறுக்கு வாட்டத்தில் பிளந்தால் சக்கரமாகவும் காட்சி கொடுப்பேன்.இறைவன் எனக்கு மட்டுமே அளித்த பெருமை இது. நல்ல வேளையாக எனக்குத் திருமண் இல்லை. இல்லாவிடில் என்னையும் தென்கலை வெங்காயம் , வட கலை வெங்காயம் என்று பாகுபடுத்தி படாத பாடு படு த்தியிருப்பார்க்கள் . இவ்வளவு சமுதாயக் கோட்பாடுகளையும், ஆன்மீகச் சிறப்புகளையும்,மருத்துவ குணங்களையும் கொண்ட என்னை சிலர் புறக் கணிப்பது காழ்ப் புணர்ச்சி தான். தேர் தல் சொற்பொழிவைத் தோற்கடித்து விட்டது வெங்காயத்தின் உரை. வியஞ்சன் மகாநிதி என்ற பட்டத்தை வெங்காயம் தான் அடைந்ததாக பழைய நூல்கள் தெரிவிக்கின்றன. jayasala 42