1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா.....

    திரைப் படம்:
    திருமால் பெருமை
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1968

    கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
    கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
    கோபியர் கொஞ்சும் ரமணா

    மாபாரதத்தின் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
    மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா
    மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா
    மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா
    மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா
    கோபியர் கொஞ்சும் ரமணா

    தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
    தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
    தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
    தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா
    தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா

    கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
    கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
    கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
    கோபியர் கொஞ்சும் ரமணா ரமணா ரமணா
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?....

    படம் : சந்திரோதயம்
    குரல் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்: வாலி
    ஆண்டு: 1966

    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு
    கண்ணானதோ?
    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு
    கண்ணானதோ?
    பொன்னோவியம் என்று பேரானதோ? என் வாசல் வழியாக

    வலம் வந்ததோ?
    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு
    கண்ணானதோ?

    குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத
    கனியல்லவோ?
    குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத
    கனியல்லவோ?
    நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ? நெஞ்சோடு நீ சேர்த்த
    பொருளல்லவோ?
    எந்நாளும் பிரியாத உறவல்லவோ?

    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன்
    நிறமானதோ?
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ? என் காதல் உயிர் வாழ
    இடம் தந்ததோ?
    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன்
    நிறமானதோ?

    ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ

    ஆஆஆஆஆ
    ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ

    ஆஆஆஆஆ

    முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத்
    தொடுகின்ற நெருப்பல்லவோ?
    முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத்
    தொடுகின்ற நெருப்பல்லவோ?
    சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ? சந்தோஷம் வருகின்ற
    வழியல்லவோ?
    என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?

    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு
    கண்ணானதோ?

    அலையோடு பிறவாத கடல் இல்லையே நிழலோடு நடக்காத
    உடல் இல்லையே
    துடிக்காத இமையோடு விழியில்லையே துணையோடு சேராத
    இனமில்லையே
    என் மேனி உனதன்றி எனதில்லையே
    இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ? இருக்கின்ற சுகம்
    வாங்கத் தடை போடவோ?
    மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ? முகத்தோடு முகம்
    வைத்து முத்தாடவோ?
    கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?
    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன்
    நிறமானதோ?
    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு
    கண்ணானதோ?
    ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
     
    Last edited: Aug 22, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே,......

    படம்: பாவை விளக்கு
    இயற்றியவர்: மருதகாசி
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியவார்: சி.எஸ். ஜெயராமன்
    ஆண்டு: 1960

    ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
    ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
    அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே
    ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
    அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே

    தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் ம்...
    தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
    அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே
    அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே எங்கும்
    ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே
    ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே

    ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
    அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

    எங்கும் பனி தூங்கும் மலை...
    எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக் கிளியே நெஞ்சில்
    இன்ப நிலை தந்திடுதே வண்ணக் கிளியே
    எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக் கிளியே நெஞ்சில்
    இன்ப நிலை தந்திடுதே வண்ணக் கிளியே
    பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக் கிளியே
    பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக் கிளியே இங்கே
    சங்கத் தமிழ் முழங்கிடுதே வண்ணக் கிளியே
    சங்கத் தமிழ் முழங்கிடுதே வண்ணக் கிளியே

    ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றாலம்
    அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

    மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும்
    மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும்
    சந்திரன் போல் சூரியனும் வண்ணக் கிளியே குளிர்ச்சி
    தந்திடுவான் இங்கு என்றும் வண்னக் கிளயே

    ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றாலம்
    அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே
    வண்ணக் கிளியே
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆடை கட்டி வந்த நிலவோ?


    படம்: அமுதவல்லி
    இயற்றியவர்: தங்கை டி.என். ராமையா தாஸ்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
    ஆண்டு: 1959

    ஆடை கட்டி வந்த நிலவோ?
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
    இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
    ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
    காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
    கூடு கட்டி வாழும் குயிலோ?

    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை

    எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
    தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
    எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
    தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்

    கிளை தான் இருந்து கனியே சுமந்து
    தனியே கிடந்த கொடி தானே
    கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
    காவினில் வாழும் கிளி நானே

    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
    சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை

    ஆ...ஆ..ஆ..

    அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
    அல்லி மலர் இனத்தவளோ?
    அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
    அல்லி மலர் இனத்தவளோ?
    உந்தி உந்தி விழும் நீரலையில்
    ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
    இன்பம் தந்த மயில் இந்த மானோ?

    ஆஹா அஹஹஹஹஹஹா

    ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..

    அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
    அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
    வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
    மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

    இதயம் கனிந்து எதையும் மறந்து
    இருவர் மகிழ்ந்து உறவாட
    நன்னேரமிதே மனம் மீறிடுதே
    நன்னேரமிதே மனம் மீறிடுதே
    வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்

    ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...

    ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
    மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
    ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
    காடு விட்டு வந்த மயிலோ?
    நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
    ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
    மேடை கட்டி ஆடும் எழிலோ?
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்

    படம்: பேசும் தெய்வம்
    இயற்றியவர்: வாலி
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1967

    நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
    உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
    நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
    உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
    நான் அனுப்புவது கடிதம் அல்ல

    நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
    நீருக்கு மீன் எழுதும் கடிதம்
    நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
    நீருக்கு மீன் எழுதும் கடிதம்
    மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
    மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

    எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
    உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
    நான் அனுப்புவது கடிதம் அல்ல

    எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
    ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
    என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
    என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
    உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

    நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
    உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
    நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்..
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே.....


    படம்:
    அன்பு எங்கே
    இயற்றிவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: வேதா
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1958

    ஏய்..யா
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

    அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
    அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
    அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
    மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்

    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

    ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
    ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
    அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
    ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி

    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆஹாஹாஹா
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே ஆஹாஹாஹா
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

    கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
    காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
    குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
    குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச

    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

    கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
    பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
    கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
    பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
    கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
    காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது

    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

    ஹாய்..யா
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
    உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்.....

    படம்:
    ஆனந்தி
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: பி. சுசீலா
    ஆண்டு: 1965

    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
    நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

    நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
    பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
    சொல்லாத நினைவிருக்கும்

    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

    பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு?
    முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன?
    கண்ணாடி கேட்பதென்ன?

    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

    சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
    எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
    இந்நேரம் கேள்வியில்லை

    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?......


    படம்:
    நெஞ்சிருக்கும் வரை
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    ஆண்டு: 1967

    முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

    படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
    பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?

    முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

    கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
    கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
    எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
    விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?

    முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

    ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?
    அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
    மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?
    வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?

    முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

    திரைப்படம்: மீண்ட சொர்க்கம்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: டி. சலபதி ராவ்
    பாடியோர்: ஏ.எம். ராஜா, பி. சுசீலா
    ஆண்டு: 1960

    கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
    கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
    நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆ
    கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

    மாலையிலும் அதிகாலையிலும் ஆஆஆஆஆஆஆஆஆஆ
    மலர் மேலும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே
    ஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆடிடும் அழகே அற்புத உலகில்
    நீ இல்லையேல் நான் இல்லையே

    கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

    கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை ஆஆஆஆஆஆஆஆஆஆ
    கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
    ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
    பாவமும் ராகமும் தாளமும் நீயே
    பாவமும் ராகமும் தாளமும் நீயே
    நீ இல்லையேல் நான் இல்லையே ஆஆஆஆஆஆஆஆஆ

    கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
    நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆஆ
    கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே.....

    திரைப்படம்: மாலையிட்ட மங்கை
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியோர்:டி.ஆர். மஹாலிங்கம்


    சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
    நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
    நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
    மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

    செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிடத் தலை குனிவாள்

    காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
    கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
    கற்பனை வடித்தவளோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

    செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
    சிர்க்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிடத் தலை குனிவாள்

    கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
    கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

    செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
    சிர்க்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிடத் தலை குனிவாள்
     

Share This Page