| |||||||||||||||||
| ||||
| wonderful are your poems mam, a long journey has taken many colors to decorate the journey atlast..sunkan
__________________ ramana's q and a follows now in blog |
| |||
| ஆன்மீகம் ஆன்மீகம் என்ற ந்தியின் ஓட்டம் சீராகச்செல்ல அமைந்த கரைகள் ஞானம் பக்தி என இரண்டாகும் கரை உடைந்து வெள்ளம் வராமல் தடுக்கும் அணையே ஆசாரியன் பக்தி மட்டும் இருக்க கரை புரளும் வெள்ளம் ஞானம் மட்டுமே இருக்கத்தடைபடும்வேகம் இருகரையும் சீராயின்நதி கடலைச்சேரும் |
| ||||
| saroja ma'am, very nicely penned the importance of Bakthi and Jnanam for our spiritual journey.. sriniketan
__________________ count your blessings.....and be happy.... ![]() 10 kurals a week.. |
| |||
| நான் எனது என்பது பற்றின் பற்றுக்கோடு எல்லாம் அவன் என்பது அப்பற்றினை அழிக்கும் கோடு. நிலை அற்ற வாழ்வில் நிலையானதென்? இன்று இங்கு நாளை எங்கோ எங்கு சென்றாலும் உடன் வரும் இறைவன் அருள் இருக்க பயமேன் இடுக்கண் வருங்கால் நகுக அவை இறைவன் செய்யும் அறுவை சிகிச்சை அதை நம்பித்துணிந்துஎடுக்கும் முடிவே இதற்கு மனிதன் செய்யும் அவசர சிகிச்சை எல்லாம் உன் செயல் என் செயல் ஏதுமில்லை ஒன்றுமறியாப்பாமரமென நின்ற எமை வழிகாட்டி நடத்திச்சென்றாய் நின் அருள் இருக்க குறைவேது எண்ணம் யாவும் நின் திருவுள்ளம் செய்கை யாவும் நின் கட்டளை சொல்லுவதெல்லாம் நின் வாய்மொழி என்ற நிலை எனக்குத்தருவாய் ஆண்டவன் சோதிப்பது நல்லிதயம் படைத்தோரை ஆனால் அவன் தண்டிப்பது தீய உள்ளம் கொண்டோரை |
| |||
| .இறையருள் என்னும் ஊற்று கிடைத்தற்கறிய பெரிய பேறு கிடைத்தவரை நிறைவுறு மனமே அடைந்தது சில் துளிகள் ஆயினும் அது அடைதற்கறிய அமுதமன்றோ இறைவன் திருவருள் நிரம்பப்பெறின் இறைக்க இறைக்கஊறும் ஊற்றென குறையாத ந்ன்மை வந்து சேரும் நிறைந்த அன்பு மனம் ஒன்றிருந்தால் ஒருவரில் சிலர்காண்பார் இறைவனின் உண்மை வடிவம் பளிங்குபோல் உள்ளத்தில் தெய்வம் பால் போல் விளங்குமன்றோ எல்லோருள்ளும் உறையும் இறைவனை எல்லோரும் அறிவது அரிது ஒருவரிடமேனும் அவனைக்காண்பது கிடைத்தற்கரிய பேறன்றோ.! கண்ணனைக்காண்பதெப்போது கண்களால் உன் உருவம் மன்தில் வரைந்தேன் பண்ணிசைத்து உன் நினவில் அமிழ்ந்தேன் விண்மீன்களிடையே உன்னைத்தேடினேன் கண்ணா உன்னை நான் காண்பதெப்போது? கருவுடை மேகங்களிடை மறைந்தாயோ தருவடர்ந்த வனத்தினிடை ஒளிந்தாயோ இருண்ட கு்கையெனும் மன்த்தினுள் இருந்தாயோ அருவமாய் உலகினில் கரந்து உறைந்தாயோ எங்கென்று தேடுவேன் யாரிடம் போய் உரைப்பேன் பித்தம் பிடித்ததென்று பிறரும் சிரியாரோ ஒளிந்து விளையாடவோ அன்றெனை வயப்படுத்தி மயக்கமுறச்செய்து இன்று மறைந்தாய் நீ? கண்ணா உன்னை உள்ளபடி காண இயலாது என்னால் இம்மண்ணுலகில் காணும் உருவமே உனதாய் தோன்றும் மாயம் உந்தன் திருவுள்ளமோ! Last edited by sarojaramanujam; 4th July 2008 at 04:13 AM. |
| |||
| நினைவெல்லாம்நாராயணன் நாவினில் நாராயணன் நாமம் மனதினில் மாதவன் நினைவு கண்களில் கேசவன் உருவம் செவிகளில் ஸ்ரீதரன் குழலிசை சொல் செயல் எண்ணம் யாவுமே அரிமுகன் அச்சுதன் தனக்கென அவன் வயப்பட்டு நிற்றல் அன்றி வேறொன்றும் வேண்டேன் பராபரமே |
| |||
| ஒன்றே பலவாகும் வெண்ணிலா என்றும் ஒன்றே அதன் பிரதிபிம்பம் பலவேயாம் பிரதிபலித்த பொருளின் குணம் நிலவிற்கு ஒட்டுமோ கண்ணன் ஒருவனே ஆயினும் பலவாகி நின்றான் பாவையர் மனதில் கண்ணன் எனக்கே சொந்தம் என எண்ணிப்பேதையர் மயங்கினரே கரியவன் கருணை ஏறு போல் நடையினால் உன் வீரம் விளங்கக்கண்டோம் சீரிய சிங்கம் போல்உன் மேன்மை துலங்கவந்தாய் வேழமென உன்னைக்கம்பன் கூறினான் கவிநயத்துடன் கைத்தலம் பற்றிய உன்னை களிறெனக்கண்டாள் கோதை மென்மையும் வலிமையும் சேர்ந்த கரியவன் உன் கருணை ஒன்றே அடியவர் கரம் பற்றித்தூக்கி உயரிய இடம் சேர்க்கும் அன்றோ |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| ஸ்ரீவேணு கோபாலன் கதைகள்? | krishnaamma | Book Lovers | 9 | 23rd November 2008 08:09 AM |
| என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்ட& | sunkan | Gardening | 14 | 26th August 2008 05:51 AM |
| கணினி கைதிகள்.... | brindhak | Poems & Poets Place | 25 | 12th June 2008 10:05 AM |
| விதைகள் (ஒரு கவிதை) | robo | Forward Messages & Jokes | 0 | 18th April 2008 04:16 AM |
| நையாண்டிக் கவிதை | Tamildownunder | Poems & Poets Place | 2 | 29th March 2007 11:31 PM |