குன்னக்குடி வைத்தியநாதன் கடந்த 1935ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்
குன்னக்குடியில் பிறந்தவர்.
இவரது தந்தை பெயர் ராமசாமி சாஸ்திரி. தாயார் மீனாட்சி.
சிறுவயதிலேயே வயலின் மேதையாக திகழ்ந்த கவைத்தியநாதன் 12 வயதிலேயே இசைக்
கச்சேரிகளில் பங்குகொண்டார். பிரபலமான இசைக்கலைஞர்களின் குழுவில் இணைந்து
நிகழ்ச்சிகள் செய்தார்.
கடந்த 1963ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்த அவர், 1969ம் ஆண்டு சொந்தமாக
ஒரு படத்துக்கு இசையமைத்தார். தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்தார்.
1970ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றார்.
இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அவர்,
சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் சிறந்து விளங்கினார்.
இவர் திரை உலகில் பின்னணி பாடலும் பாடியுள்ளார். இவர் பாடிய
'கொட்டாம்பட்டி ரோட்டிலே... குட்டிபோற சோக்கிலே' என்ற பாடல் பெரும் புகழ்
பெற்றது.
'வயலின்' என்றாலே நினைவுக்கு வருவது குன்னக்குடி வைத்தியநாதன் என்ற
அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்ற இவரது மறைவு, இசை
உலகத்துக்கு மாபெரும் இழப்பு என்றால் மிகையில்லை.