| |||||||||||||||||
| |||||||
| Home | Register | Blogs | Directory | FAQ | Search | Today's Posts | Mark Forums Read |
| Face & Skin Care Beauty tips on skin care |
| REGISTER TODAY! it is SIMPLE, EASY and FREE! You could also WIN a T-Shirt! |
![]() |
| | LinkBack | Thread Tools | Display Modes |
| ||||
| Hi....thanks for the tips. I apply a mask made of besan,sandalwood paste,honey and curd regularly and it definitely gives my skin a fresh look.
__________________ A smile is a curve that sets everything straight. |
| |||
| Hi Sunitha Thank you very much for sharing very useful tips. From tomorrow i will try some of them. Waiting for some more tips. Alivelu
__________________ We become what we think most of the time. |
| |||
| Thanks for this information. One tip from me, you can use mashed banana on face , keep it for 15 mins and rinse off to get that glowing skin. |
| ||||
| hi friends, some Facial tips, வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள். தினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும். வெயிலால் வரும் கருமையை விரட்ட....டிப்ஸ் தேங்காய் பால் - 2 டீஸ்பூன் கடலை மாவு - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த ''பேக்'' போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த ''பேக்''கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு ''பளிச்'' சிகிச்சை. முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்.... கேரட் சாறு - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும். முகத்தில் எண்ணெய் வடிகிறதா? முல்தானிமட்டி - டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு ''பேக்'' போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த ''பேக்'' போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும். முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க..... உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன் பயந்த மாவு - 1 டீஸ்பூன் மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ''பேக்'' போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த ''பேக்'' போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும். ''சூப்பரான ஒர் ஹேர் பேக்''..... ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்ரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும். உடலைக் குளுகுளுப்பாக்க.... ஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்ர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு žயக்காய் போட்டு குளியுங்கள். வாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும். ''கலக்கல் பேக்'' இது... உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன் மருதாணி பவுடர் - 1 டீஸ்பூன் வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 2 டீஸ்பூன் இவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் ''பேக்'' ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர். தேங்காய் வைத்தியம்... மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (žயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது. பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்ப ர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்து க்கள் உள்ளன. பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து. ஆராய்ச்சியில் பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகளும் L.D.L 23.3குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பப்பாளியில் பப்பின் புரதசத்துள்ளது.பாப்பின் எனப்படும் பப்பாளி பால் மருந்துகள்தயாரிக்கவும் ,முகத்தின் பொலிவுக்கு உபயோகிக்கும் கீரிம்களிலும் சேர்க்கப்படுகின்றன. பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் . சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும். பெண்கள் சிவப்பழகை பெற செய்ய வேண்டியது கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும். மென்மையான பாதங்களுக்கு! பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும் பார்த்து படித்துவிடு அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.! தங்கள் பதிலைய் எதிர்பார்த்து காத்திருக்கும் . நம்மை அழகாக்கும் தக்காளி தக்காளிப் பழத்தால் எப்பேர்பட்ட பெண்ணின் முகத்தையும் தக தகக்க வைத்து விடலாம். தக்காளியனாது முகச்சுருக்கத்தை விரட்டி இளமைனவராக மாற்றி விடும். நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும். சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம். தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள். கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல் கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ர்லாக்ஸ் பிளீஸ் உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. இந்த தக்காளி பேஸ்ட்! உருளைக்கிழங்கு துரவல் சாறு டீஸ்பூன் தக்காளி விழுது அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால் சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க. தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள். முதலில முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும் Regards, Uma Last edited by anubagi : 8th May 2008 at 08:11 AM. |
| ||||
| Dear Uma, thanks for those tips but kindly post them in English also, coz every one don't know Tamil.. If u can plz translate them into Eng..
__________________ ---- SunithaMadhu ---- Invite your Friends to IL | Chalo Hyderabad | Visit AP forum |
| |||
| thanks for the tips but I dont know tamil.Can you please translate them? gayatri Last edited by gayatri310 : 7th July 2008 at 06:40 AM. |
![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| To have glowing skin. | tulip | Face & Skin Care | 6 | 30th May 2008 10:25 PM |
| Glowing Skin: Any tips? | shaheen13 | Face & Skin Care | 5 | 20th May 2008 09:06 AM |
| Glowing Skin | kanaka Raghavan | Face & Skin Care | 10 | 19th November 2007 11:28 PM |
| Oil massage for glowing skin. | Kurunji | Face & Skin Care | 4 | 12th November 2007 02:55 AM |
| Glowing skin is just a face pack away | BujjiChitti | Face & Skin Care | 4 | 7th September 2007 06:18 PM |