Discuss Our Culture, on IndusLadies. Our Culture - What is life like in Chennai? What are your favorite places to shop and eat? What is society like in Chennai?.
சமீப நாட்களில் எனது நட்புகளில் பலரது குழந்தைகள் அவர்களின் வாழ்க்கை துணையை அவர்களாகவே முடிவு செய்து மற்றவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது என் கண்முன்னே நிற்க (எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்), ஒரு தாயின் பார்வையில் இது குறித்து எழுதிய கவிதையை இந்துஸ்லேடீஸ் நட்புகளிடம் பகிர்ந்து கொள்கிறேன்,
அன்புடன்
சுபத்ரா சம்பத்
ஏனிந்த இரசாயன மாற்றம்?,,,,
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அவர் முந்தையர் ஆயிரமாண்டு
வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே
தமிழ் கவி பாரதி தான்
தந்தை தாய் உறவு மகிழ்வை
தரணிக்கு சொன்ன கதை
தமிழ் வகுப்பில் நடத்துகையில்
வயிற்றினுள் ஓர் புரட்டல்
வகுப்பறையே சுற்றிவர
தடுமாறி வெளிவந்து
ஓய்வறைக்கு விரைந்தேன் நான்
சில நிமிட தலை சுற்றல்
செய்வதறியா திகைப்பெனக்கு
ஆயாவென பணியாற்றும்க
அன்பான மூதாட்டி
அருகில் வந்து கைபிடிக்க
அதற்குள் செய்திபரவி / சக
ஆசிரியைகள் கூட்டமங்கே
ஆண்டு பல கடந்த நிலையில்
வேண்டுதல் பல வீணில்லை
அனுபவத்தில் முதிர்வு கண்ட
ஆயாவென்ற மூதாட்டி
தாய் என்ற பதவி உயர்வெனக்கு
வரப்போகும் செய்தி சொல்ல
பாராட்டுக்களுடன் சிரிப்பலைகளும்
பரவித்தான் போனதங்கே
கணப்பொழுதில் அகன்று சென்று
கைபேசி ஒலியெழுப்பி
கட்டியவன் காதுகளில்
கவிச்செய்தி சொன்னேன் நான்
முப்பது நாள் தொடங்கி
முன்னூறுநாள் நீ வளர்ந்த கதை
முத்து முத்தாய் கவி எழுத
மூவாயிரம் சொல் போதாது
ஏழாவது மாதம் வயிற்றினுள்
எட்டி நீ உதைத்தபோது
எங்கள் தலைமுறை வளருதென
ஏகாந்தமாய் மகிழ்ந்திருந்தோம்
தாத்தா, பாட்டி, அத்தை, மாமா
சிற்றன்னை, பெரியதந்தை யென
உறவுகள் கூடி மகிழ்ந்த
ஒன்றுபட்ட குடும்பமது
நாள்பட்டு கருவுற்று
நவீன மருத்துவத்தில்
நிழற்படம் (ஸ்கேன்) பல எடுத்து
கால் தலை இடம் மாறி
கணித்த வேளை தப்பிப் போக
ஆயுதம் சில கண்டபின்
அழகாய் நீ வந்துதித்தாய்
வெகுநேரம் நினைவுதப்ப
விழித்து நான் பார்க்கையிலே
அன்பான என்னவர் அருகே நின்றிருக்க
அழகான பெண் பூ கண்டு
நெக்குருகி கை கூப்ப
நெகிழ்வுடன் பனித்தன கண்கள்
பள்ளிக் கல்வி தொடங்கி
பார் புகழ நீ வளர
தரணியெல்லாம் பேசப்படும்
தகவல் தொழில்நுட்ப கல்வியதை
தரமாய் நீ கற்றிடத்தான்
தகுதிக்கு மீறி கடன் பட்டு
தலைநகருக் கனுப்பிவைத்தோம்
ஏட்டுக் கல்வி முடிக்குமுன்
எவனோ ஒருவன் கைபிடிக்க
ஏறிவந்த ஏணி எம்மை
எட்டி நீ உதைத்துவிட்டு
தகவல் கூட தராமல்
தடம் மாறி போனதெண்ணி
எங்கே நாம் தவறிழைத்தோம்
ஏனிந்த ரசாயன மாற்றம்
எண்ணி நாங்கள் வெந்திருந்தோம்
ஒருவரை யொருவர் புரிந்துணர்ந்து
உற்ற துணை தேர்வெனச் சொல்லி
இருமனம் இணைவது தவறில்லை என்றாலும்
இருபதாண்டு உறவான ஈன்றவர் மனம் பதைக்க
தகவல் கூட சொல்லாமல்
தடம் மாறி சென்ற தங்கே
நியாயம்தானா நீ சொல் என் செல்லமே ,,,
Beautiful , amazing kavithai,
Gone wordless for few seconds.
Vaazhthukkal vaazhthukkal Vaazhka thamil
How did u write in tamil fonts in this forum,pls tell me.