Hi, ILites
I will be putting my poems, stories and brain teaser games in this blog. You are welcome to visit and post your comments.
Regards,
TDU
I will be putting my poems, stories and brain teaser games in this blog. You are welcome to visit and post your comments.
Regards,
TDU
தமிழின் பெருமை
Posted 24th November 2007 at 09:26 AM by Tamildownunder
காளமேகப் புலவர் பசித்த வயிற்றுடன் நாகப்பட்டினம் நகரில் இருந்த
காத்தன் என்பவனின் சத்திரத்துக்குப் போனாராம். ஆனால் அங்கே
மாலை வரை சோறு சமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.
பசி முற்றியதால் புலவர் அங்கேயே சுருண்டு படுத்து விட்டார். பின்
அடுத்த நாள் காலையில் சோறுண்ண அழைக்கப்பட்ட போது
பின்வருமாறு பாடினாராம்.
"கத்து கடல் சூழ் நாகைக் காத்தன் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதினிலே அரிசி வரும் அதைக் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்."
"ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்
சத்திரத்தில் மாலை மயங்கும் வேளையில் அரிசி மூட்டைகள்
வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து
அடுப்பில் ஏற்ற இரவு வந்து விடும். சோறாக்கி இலையில் இடும்போது
பொழுது விடிந்து விடும்"
என்று பொருள் தொனிக்க பாடியதைக்
கேட்ட காத்தன் பதறி வந்து பணிந்தான்.
அவர் காளமேகப் புலவர் என்று தெரிந்து மன்னிப்பு வேண்டினான்.
இனி அவ்வண்ணம் நிகழாது என்று உறுதி கொடுத்தான். பாடலை
மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டான்.
ஆனால் புலவரோ பாடலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும் என்றும் சொன்னார்.
அதாவது "ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்
சத்திரத்தில் உலகில் எங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் அரிசி மூட்டைகள் வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து அடுப்பில் ஏற்றுவதைக் கண்டதுமே ஊராரின் பசி அடங்கி விடும். சோறாக்கி ஒரு கரண்டி அன்னம் இலையில் போட்டதும் விடிவெள்ளியாகிய சுக்கிரன் அதன் வெண்மை நிறம் கண்டு நாணி எழுந்து விடும்" என்றாராம்.
கவியின் திறமைதான் என்னே ! தமிழின் பெருமைதான் என்னே !
Nanri: Vinu
காத்தன் என்பவனின் சத்திரத்துக்குப் போனாராம். ஆனால் அங்கே
மாலை வரை சோறு சமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.
பசி முற்றியதால் புலவர் அங்கேயே சுருண்டு படுத்து விட்டார். பின்
அடுத்த நாள் காலையில் சோறுண்ண அழைக்கப்பட்ட போது
பின்வருமாறு பாடினாராம்.
"கத்து கடல் சூழ் நாகைக் காத்தன் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதினிலே அரிசி வரும் அதைக் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்."
"ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்
சத்திரத்தில் மாலை மயங்கும் வேளையில் அரிசி மூட்டைகள்
வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து
அடுப்பில் ஏற்ற இரவு வந்து விடும். சோறாக்கி இலையில் இடும்போது
பொழுது விடிந்து விடும்"
என்று பொருள் தொனிக்க பாடியதைக்
கேட்ட காத்தன் பதறி வந்து பணிந்தான்.
அவர் காளமேகப் புலவர் என்று தெரிந்து மன்னிப்பு வேண்டினான்.
இனி அவ்வண்ணம் நிகழாது என்று உறுதி கொடுத்தான். பாடலை
மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டான்.
ஆனால் புலவரோ பாடலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும் என்றும் சொன்னார்.
அதாவது "ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்
சத்திரத்தில் உலகில் எங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் அரிசி மூட்டைகள் வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து அடுப்பில் ஏற்றுவதைக் கண்டதுமே ஊராரின் பசி அடங்கி விடும். சோறாக்கி ஒரு கரண்டி அன்னம் இலையில் போட்டதும் விடிவெள்ளியாகிய சுக்கிரன் அதன் வெண்மை நிறம் கண்டு நாணி எழுந்து விடும்" என்றாராம்.
கவியின் திறமைதான் என்னே ! தமிழின் பெருமைதான் என்னே !
Nanri: Vinu
Total Comments 3
Comments
| | enjoyed reading the poem, Sir! When we look at how our poets played with the words,it is amazing! sriniketan |
Posted 24th November 2007 at 03:57 PM by Sriniketan |
| | Thanks, Sriniketan for visiting the blog and posting your comments. Our poets especially Pulavar Kaala mekam is famous for playing with words and his poems are a treasure. Regards, TDU |
Posted 25th November 2007 at 09:20 AM by Tamildownunder |
| | Nice poem, Enjoyed reading it, Do keep posting more...................... -Shantha |
Posted 26th December 2007 at 12:26 PM by kasisheela |
Recent Blog Entries by Tamildownunder
- Are Guests welcome always? (8th December 2007)
- Exotic scientific discoveries of our era-5 (30th November 2007)
- My Tamil Poems-3 (28th November 2007)
- Exotic scientific discoveries of our era-4 (27th November 2007)
- தமிழின் பெருமை (24th November 2007)





