1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஐயா சாமி ஆவோஜி சாமி...


    திரைப்படம்:
    ஓர் இரவு
    பாடியோர்: எம்.எல். வசந்தகுமாரி
    இசை: ஆர். சுதர்சனம்


    ஓ சாமி
    ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
    ராய்யா வாய்யா யூ கம்மையா
    ஐயா சாமி ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
    ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
    ராய்யா வாய்யா யூ கம்மையா
    ஐயா சாமி ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
    ஐயா சாமி ஓ ஐயா சாமி

    கோழியாட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி
    ஏழை ரத்தம் குடிக்கும் இங்கே உள்ள நரி
    பல்லிளித்துக் காட்டி பட்டம் பதவி தேடி
    கட்சிப் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்

    ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
    ராய்யா வாய்யா யூ கம்மையா
    ஐயா சாமி ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?

    வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
    மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நாட்டு நரி
    வேலை ரொம்ப வாங்கும் கூலி தர ஏங்கும்
    பட்டினியைப் பாத்தும் புளி ஏப்பம் விடும்

    ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா
    ராய்யா வாய்யா யூ கம்மையா
    ஐயா சாமி ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
    ஐயா சாமி ஒ ஐயா சாமி

    காட்டிலுள்ள நரி ரொம்ப நல்லதுங்க - உங்க
    நாட்டிலுள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க
    குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
    குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
    புள்ளை குட்டி யார்க்கும் நல்ல புத்தி வரும்

    ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா
    ராய்யா வாய்யா யூ கம்மையா
    ஐயா சாமி ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ.....

    திரைப்படம்:
    ஓர் இரவு
    பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
    இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்


    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா?
    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா?

    எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்

    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
    அல்லல்

    ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
    கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?

    கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
    இது இல்லை, பாடு,, கண்ணே சரிதானான்னு கேட்டேன்

    பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
    அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா?

    அறாமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
    அருகிலாத போதும் - யாம்
    அருகிலாத போதும் - தமிழ்
    இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
    இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
    இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
    இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
    அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொடியசைந்ததும் காற்று வந்ததா?....

    திரைப்படம்:
    பார்த்தால் பசிதீரும்
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன், p. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: m.s. விஸ்வநாதன்


    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?

    பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    ராகம் வந்ததும் பாவன் வந்ததா?
    கண் திறந்ததும் காட்சி வந்ததா?
    காட்சி வந்ததும் கண் திறந்ததா?
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?

    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
    நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?
    ஓடி வந்ததும் தேடி வந்ததும்
    பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
    காதல் என்பதா? பாசம் என்பதா?
    கருணை என்பதா? உரிமை என்பதா?

    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
    ம்ம்ம்ம்ம் ஓஹொஹோஹொஹோ
    ம்ம்ம்ம்ம் ஓ..ஓ ஓ
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்...

    திரைப்படம்:
    பார்த்தால் பசிதீரும்
    பாடியவர்: p. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: m.s. விஸ்வநாதன்


    ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. ஓஓஓ
    பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
    தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
    பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
    தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
    பார்த்தால் பசிதீரும்

    சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
    சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
    பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
    பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
    ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ

    பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
    தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
    பார்த்தால் பசிதீரும்

    பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
    பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
    முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
    முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
    பார்த்தால் பசி தீரும்

    பொன்னாடை போர்த்திவரும் புள்ளிமயில் போலிருக்கும்
    பெண்ணாகப் பிறந்தவரை பிந்தொடர்ந்து உலகம் வரும்
    ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ

    பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
    தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
    பார்த்தால் பசிதீரும்
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்....

    திரைப்படம்:
    பார்த்தால் பசிதீரும்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர்
    இசை:m.s. விஸ்வநாதன்


    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
    ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
    இறைவனை நம்பி வ்ந்தாயோ? - நீ
    ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
    இறைவனை நம்பி வ்ந்தாயோ?
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்

    தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
    தானென்று சொல்லாத போதும்
    தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
    தானென்று சொல்லாத போதும்
    தானென்று சொல்லாத போதும்
    ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்

    உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
    இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
    இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    இல்லாத இடம் தேடி வருவான் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
    ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
    இறைவனை நம்பி வ்ந்தாயோ?
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உள்ளம் என்பது ஆமை.....

    திரைப்படம்:
    பார்த்தால் பசிதீரும்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: m.s. விஸ்வநாதன்

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி
    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை

    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை
    இல்லை என்றால் அது இல்லை

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை

    தண்னீர் தணல் போல் எரியும் - செந்
    தணலும் நீர் போல் குளிரும்
    தண்னீர் தணல் போல் எரியும் - செந்
    தணலும் நீர் போல் குளிரும்
    நண்பனும் பகை போல் தெரியும் - அது
    நாட்பட நாட்படப் புரியும்
    நாட்பட நாட்படப் புரியும்

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி
    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்று ஊமைப் பெண்ணல்லோ....


    திரைப்படம்:
    பார்த்தால் பசிதீரும்
    பாடியவர்: a.l. ராகவன், p. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: m.s. விஸ்வநாதன்

    ஆனா ஆனா ஆவன்னா ஆவன்னா இன இன ஈயன்ன
    உன உன ஊவன்னா என என ஏயன்னா ஏயன்னா
    ஓனா ஓனா ஓவன்னா ஓவன்னா ஔவன்னா ஔவன்னா அஃகன்னா அஃகன்னா

    கசடதபற கசடதபற வல்லினமாம் வல்லினமாம்
    ஙஞண்நமன ஙஞண்நமன மெல்லினமாம் மெல்லினமாம்
    யரலவழள யரலவழள இடையினமாம் இடையினமாம்

    ஓஹோஹோ ஹோஹோஹோ ஒஹோஹோஹோஹோ
    ஹொஹோஹோஹொஹோஹொஹோ ஹோஹோஹோ
    ஹோஹோஹோஹோஹோஹோஹோ
    ஹோஹோஹோஹோஹோஹோஹோ

    அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - ஐயா
    உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
    அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - ஐயா
    உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

    மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
    மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ

    ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
    ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
    ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
    ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

    ஓஹோஓஹோ ஓஹோ ஹொஹோஹோஹோ
    ஓஹோஹோ ஹொஹோஹோ ஹொஹோஹோ ஹோய்

    வண்ணத்தமிழ்ச் சேலை கட்டிக் கொண்டல்லோ
    கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
    கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
    நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
    நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
    நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

    மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
    மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
    ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
    ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோஹோ

    காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஓ
    மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
    இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
    அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
    தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
    தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

    மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
    மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
    ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
    ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

    ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
    ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
    ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
    ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
    ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உலகம் பிறந்தது எனக்காக...

    திரைப்படம்: பாசம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி
    ஆண்டு: 1961

    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
    இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்

    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

    தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
    குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
    குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்

    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

    எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
    அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்

    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எங்களுக்கும் காலம் வரும்....


    திரைப்படம்: பாசமலர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: க்விஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    ஆண்டு: 1961

    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
    தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா

    தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ

    வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
    மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
    மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
    காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

    தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ

    உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
    உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
    பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
    மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

    நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
    வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
    வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
    தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...


    திரைப்படம்: பாசமலர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: க்விஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    ஆண்டு: 1961

    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
    வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
    வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
    கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
    கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

    மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
    மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
    மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
    மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
    மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
    மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
    மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்

    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
    கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

    ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
    அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
    வாழிய கண்மணி வாழிய என்றான்
    வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்

    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
    கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

    பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
    பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
    பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
    பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
    மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
    மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
    வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
    கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
     

Share This Page